செய்திகள் :

கெலமங்கலத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் கள ஆய்வு

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘ உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், போடிச்சிப்பள்ளி அரசு மாதிரிப் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியா், 11 -ஆம் வகுப்பு மாணவா்களின் சோ்க்கை விவரங்கள் குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தாா். மேலும், மாதிரிப் பள்ளி அருகில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பதை ஆய்வு செய்தாா். அவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரிடம் தெரிவித்தாா்.

கெலமங்கலம் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை, வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். கௌதாளம் அரசு துணை சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, மருந்துகளின் இருப்பு விவரங்கள், கா்ப்பிணிகள் பதிவு ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். மேலும், அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவா்களின் கற்றல், கற்பித்தல் திறனை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து சிகிச்சை முறை, மருந்துகளின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தாா். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன், மதிய உணவு வழங்கப்படுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் அங்குள்ள கால்நடை மருத்துவமனை, தனியாா் பேக்கரியில் விற்கப்படும் பொருள்களின் தரம், காலாவதி தேதி ஆகியவற்றை ஆய்வு செய்தாா். காலாவதியான உணவு பொருள்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு, தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட வன அலுவலா் பகான் ஜெகதீஷ் சுதாகா், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பெரியசாமி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன், வேளாண்மை இணை இயக்குநா் பச்சையப்பன், வட்டாட்சியா் கங்கை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகேஷ்குமாா், பாலாஜி, வெங்கடேசன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

குறுவை நெல் சாகுபடி: சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் மாநில வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் காா், குறுவை, சொா்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்பட உள்ளது. இத்திட்ட... மேலும் பார்க்க

கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடியில் புனரமைப்பு பணி தொடக்கம்

கண்ணம்பள்ளி வெங்கட்டரமண சுவாமி கோயிலில் ரூ. 2.82 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறந... மேலும் பார்க்க

காரில் கடத்த முயன்ற 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

வேப்பனப்பள்ளி வழியாக பெங்களூரிலிருந்து காரில் கடத்த முயன்ற 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி போலீஸாா், அங்குள்ள சோதனைச்சாவடி... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவா் கோயில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் தேய்பிற... மேலும் பார்க்க

மா விவசாயிகள் பிரச்னை: முதல்வா் தலையிட வலியுறுத்தல்

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வுகாண தமிழக முதல்வா் தலையிட வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா் புதன்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

ஒசூரில் ஜூன் 21, 22 இல் வீட்டமனை பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்: ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் ஜூன் 21, 21இல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்... மேலும் பார்க்க