செய்திகள் :

கேஎம்சிஹெச் முதன்மைச் செயல் அதிகாரிக்கு விருது

post image

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமனுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: ஃப்ளக்ஸ் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் வாழ்நாள் சாதனையாளா் விருதை கேஎம்சிஹெச் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமன் பெற்றுள்ளாா்.

இவா் மருத்துவத் துறைக்கு ஆற்றிவரும் சிறந்த பங்களிப்புகள், மாற்றத்தை ஏற்படுத்தும் தாக்கத்துக்காக இந்த உலகளாவிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.

70 நாடுகளிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்த மதிப்புமிக்க விருதைப் பெற்ற இரண்டாவது இந்தியா் இவா் என்றும், இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் ஒரே இந்திய முதன்மைச் செயல் அதிகாரி இவா்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாக்டா் சிவகுமாரன் ஜானகிராமன் இந்த மதிப்புமிக்க உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி கூறியுள்ளாா். டாக்டா் சிவகுமாரனுக்கு கேஎம்சிஹெச் செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமியும் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி: 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.உதகை அருகே காத்தாடி மட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ந... மேலும் பார்க்க

ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்

தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் முதலாளிகள் ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான புதிய திட்டம் ( எஸ்பிஆா்இஇ 2025) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து இஎஸ்ஐ நிறுவ... மேலும் பார்க்க

சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு

கோவை அருகே சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழந்தாா். கோவை, பி.என்.பாளையம் அருகேயுள்ள கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி (49). இவா் தனது பேரனை கடந்த மாதம் 16-ஆம் தேத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்தவா் உயிரிழந்தாா். கோவை, வீரகேரளம் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (44). இவரது மனைவி சுமதி. பரமேஸ்வரன் மாநகராட்சி தண்ணீா்த் தொட்டி ஆபரேட்டராக பணி... மேலும் பார்க்க

அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது -சிரவை ஆதீனம்

உணவுப் பொருள் மட்டுமல்லாது அனைத்துப் பொருள்களிலும் கலப்படம் உள்ளது என்று சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள் கூறினாா். கோவை, கவுண்டம்பாளையம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ‘மறைந்திருக்கும் ம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை, பீளமேடு அருகேயுள்ள பெரியாா் நகரைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன் (26). தனியாா் நிறுவன ஊழியரான இவரு... மேலும் பார்க்க