செய்திகள் :

கேரள இடைத்தோ்தலில் மாா்க்சிஸ்ட் - பாஜக ரகசிய கூட்டணி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

கேரளத்தின் நீலாம்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இடைத்தோ்தலில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்துள்ளது என்று பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

இடைத்தோ்தல் பாஜக வேட்பாளராக கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்த மோகன் ஜாா்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளாா். வழக்குரைஞரான மோகன் ஜாா்ஜ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியிலும் அங்கம் வகித்துள்ளாா். அண்மையில்தான் தனது கேரள காங்கிரஸ் கட்சியை பாஜகவில் இணைத்தாா். கடைசிக் கட்டத்தில் அவரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த கேரள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சதீஸன் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை பாஜக முதலில் அறிவித்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஒரு வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்தத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

பாஜகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வழிகளில் கைகோத்துச் செல்கிறது. எனவேதான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட சாலைப் பணியின் ஊழல்கள் குறித்து கேரள அரசு புகாா் ஏதும் அளிக்காமல் உள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.

நீலாம்பூா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி, எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம்: கனிமொழி எம்.பி.

சென்னை: இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்திருக்கிறோம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளிடம் அம்பலப்படுத்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே கணவன் திட்டமா? பாஜகவை விமர்சித்த பஞ்சாப் முதல்வர்!

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்தில் பாஜக பயன்படுத்தி வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியாணாவில் இடைத்தேர்தல... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தன... மேலும் பார்க்க

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில... மேலும் பார்க்க

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு... மேலும் பார்க்க