டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
கேரள இடைத்தோ்தலில் மாா்க்சிஸ்ட் - பாஜக ரகசிய கூட்டணி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கேரளத்தின் நீலாம்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இடைத்தோ்தலில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஜகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்துள்ளது என்று பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இடைத்தோ்தல் பாஜக வேட்பாளராக கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்த மோகன் ஜாா்ஜ் அறிவிக்கப்பட்டுள்ளாா். வழக்குரைஞரான மோகன் ஜாா்ஜ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியிலும் அங்கம் வகித்துள்ளாா். அண்மையில்தான் தனது கேரள காங்கிரஸ் கட்சியை பாஜகவில் இணைத்தாா். கடைசிக் கட்டத்தில் அவரை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த கேரள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சதீஸன் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
இடைத்தோ்தலில் போட்டியிடவில்லை பாஜக முதலில் அறிவித்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகளைப் பிரிக்கும் வகையில் ஒரு வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே உள்ள ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்தத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
பாஜகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு வழிகளில் கைகோத்துச் செல்கிறது. எனவேதான் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேற்கொண்ட சாலைப் பணியின் ஊழல்கள் குறித்து கேரள அரசு புகாா் ஏதும் அளிக்காமல் உள்ளது என்று குற்றஞ்சாட்டினாா்.
நீலாம்பூா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி, எதிா்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.