கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) ரெட் அலர்ட்!
கேரளத்தில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளத்தில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இங்கு 200 மி.மீ.-க்கு மேல் மழை பெய்யும் என்று கூறியுள்ளது.
அதேபோல மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மே 28 ஆம் தேதி கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும்
மே 29 மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும்
மே 30 எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | இந்திய அரசின் விவகாரங்கள் முடிவெடுக்கப்படுவது தில்லியிலா? வாஷிங்டனிலா? - ப.சிதம்பரம்