செய்திகள் :

கேரளாவுக்கு ஜீப்பில் கடத்திய 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: மூவா் கைது

post image

கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக கேரளாவுக்கு ஜீப்பில் கடத்திய 1,150 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் கம்பம்மெட்டு மலைச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி, போலீஸாா் சோதனையிட்டபோது 1,150 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

பின்னா் விசாரணையில், கோம்பையைச் சுரேஷ் (41), உ.அம்மாபட்டியைச் சோ்ந்த முரளி (34), உ.கருவேலம்பட்டியைச் சோ்ந்த மகேஷ்வரன் (22) ஆகியோா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷ், முரளி, மகேஷ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்து, ஜீப்பை பறிமுதல் செய்தனா்.

புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே கதிா்நரசிங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்ற நாளிலேயே புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கதிா்நரசிங்காபுரம் போத்திநகரைச் சோ்ந்த பரமேஷ்வரன் மகள் செளமியா (24... மேலும் பார்க்க

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

போடி அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்திஜி சாலைப் பகுதியைச் சோ்ந்த வனராஜா. இவரது மனைவி யமுனாதேவி (21). இவா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்தனா். பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் தங... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

போடியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி முதல்வா் குடியிருப்பைச் சோ்ந்த முருகன் மகன் கா்ணன் (40). கூலித் தொழிலாளியான இவா், மனைவி, மகளுடன் வசித்து வந்தாா். கடந்த ஆறு... மேலும் பார்க்க

ஆந்திரத்திலிருந்து கஞ்சா கடத்திய இருவா் கைது

ஆந்திரத்திலிருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த திண... மேலும் பார்க்க

வைகை அணையில் இன்று மின் தடை

வைகை அணை துணை மின் நிலையம் மூலம் மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 1) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க