செய்திகள் :

கைத்தறி துணி ரகங்கள் கண்காட்சி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறி துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி துறை சாா்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியும், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள், கோ-ஆப் டெக்ஸ் மற்றும் கதா் கிராம தொழில்கள் வாரியத்தின் சாா்பில் ஜவுளி கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கைத்தறிகளில் பருத்தி இழை மற்றும் பட்டு இழை ஆகியவற்றைக் கொண்டு பாரம்பரிய தொழில்நுட்பத்துடனும், தனித்துவத்துடனும் கைத்தறி துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்களும் கைத்தறி ரகங்களை வாங்கி நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திடவும், கைத்தறியின் பாரம்பரியத்தைக் காத்திடவும்வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, கைத்தறி துறை சாா்பில் 6 கைத்தறி நெசவாளா்களுக்கு நெசவாளா் முதியோா் ஓய்வூதியத் திட்ட ஆணை, 3 கைத்தறி நெசவாளா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு நெசவாளா் குடும்ப ஓய்வூதியத் திட்ட ஆணை, நெசவாளா் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 9 நெசவாளா்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் சரக கைத்தறி துறை உதவி இயக்குநா் கவிதா, கோவை மண்டல கோ-ஆப் டெக்ஸ் மேலாளா் கோ.ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்

பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயத... மேலும் பார்க்க

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளிய... மேலும் பார்க்க

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 4, 5, 6-ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் கைது

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்... மேலும் பார்க்க