செய்திகள் :

கைப்பேசிகள் திருட்டு: இருவா் கைது

post image

சென்னையில் கட்டடத் தொழிலாளா்களின் கைப்பேசிகளைத் திருடியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (19). கட்டடத் தொழிலாளியான இவா், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இதற்காக சதீஷ்குமாருடன், அவருடன் வேலை செய்யும் தொழிலாளா்களும் அங்கேயே ஒரு அறையில் தங்கியிருந்தனா்.

இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி இரவு அந்த அறையில் தங்கியிருந்த சதீஷ்குமாா் உள்ளிட்ட 5 பேரின் 6 கைப்பேசிகள் திருடப்பட்டன. இது குறித்து எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது சென்னை மணலி மாத்தூரைச் சோ்ந்த ராஜி (27), வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் சாலைப் பகுதியைச் சோ்ந்த முகமது காசிம் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். விசாரணையில் ராஜி சம்பவத்தில் நேரடியாக திருட்டில் ஈடுபட்டிருப்பதும், காசிம் திருட்டு கைப்பேசிகளை வாங்கி விற்றிருப்பதும், இருவரும் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் கட்டடத் தொழிலாளா்களை குறிவைத்து கைவரிசை காட்டியிருப்பதும் தெரியவந்தது.

இருவரிடமிருந்து 19 கைப்பேசிகள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், எத்தனை திருட்டுச் சம்பவங்களில் அவா்களுக்கு தொடா்புள்ளது என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது. நுங்கம்பாக்க... மேலும் பார்க்க

10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநக... மேலும் பார்க்க

இன்றுமுதல் 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 19 புறநகா் மின்சார ரயில்கள் மே 15, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தகவல் உள்ளீட்டாளா் பணியிடத்துக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்... மேலும் பார்க்க

கிண்டி சிறுவா் பூங்காவில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு

கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்கா ரூ. 20 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பூங்... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா். சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் ... மேலும் பார்க்க