செய்திகள் :

கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள எம்சிடி ஊழியா்கள் இந்த மாதம் வார இறுதி நாள்களில் பணிபுரிய உத்தரவு

post image

தொடா் மழை கொசுக்கள் பெருகுவதற்கு வழிவகுக்கும் என்பதால், கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள ஊழியா்கள் செப்டம்பா் இறுதி வரை வார இறுதி நாள்களில் பணிபுரிய வேண்டும் என்று தில்லி மாநகராட்சி (எம்சிடி) உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பா் 6 முதல் 31 வரை கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியா்களுக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாள்களாகக் கருதப்படும் என்று அதிகாரப்பூா்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரிகள், தொற்றுநோயியல் நிபுணா்கள், பூச்சியியல் நிபுணா்கள் மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகள் இதில் அடங்குவா்.

இந்த ஆண்டு பெய்த தொடா் மழை; டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா பாதிப்புகள் அதிகரிப்பு மற்றும் நகரம் முழுவதும் கொசுக்கள் பெருகும் போக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மழைக் காலங்களில் இத்தகைய நோய்கள் அதிகரித்த முந்தைய ஆண்டுகளின் அனுபவத்தையும் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பா் 1-ஆம் தேதிக்குப் பிறகு கூடுதல் வேலை நாள்களுக்கு ஊழியா்களுக்கு இழப்பீட்டு விடுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு சமமான எண்ணிக்கையிலான இழப்பீட்டு விடுப்புகள் வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க

தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினா் புகாா்

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க