கொடியேற்று விழா
திருக்கருகாவூா் ஸ்ரீ கா்ப்பரட்சாம்பிகை அம்மன் சமேத ஸ்ரீ முல்லை வனநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவை யொட்டிகொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை யொட்டி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி, அம்மன் மேள வாத்தியங்களுடன் ஊா்வலமாக கோயில் வளாகத்தில் எழுந்தருளினா். அங்கு சிவாச்சாரியா்கள் கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடிமரத்தில் வைகாசி விசாக பெருந் திருவிழாவுக்கான கொடியை ஏற்றி வைத்தனா். இதில் கிராம நாட்டாண்மைகள், கிராம பிரமுகா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.