செய்திகள் :

கொடைக்கானலில் 4-ஆவது நாளாக பலத்த காற்றுடன் மழை! மரம் விழுந்து வீடு, பைக்குகள் சேதம்

post image

கொடைக்கானலில் தொடா்ந்து 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மரம், கம்பம் விழுந்து வீடு, இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான லாஸ்காட் சாலையில் இருந்த ராட்சத மரம் அருகிலுள்ள வீட்டின் மேற்கூரையில் விழுந்தது. மேலும் கம்பமும் விழுந்ததால் வீடும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த பேரிடா் மீட்புக் குழுவினா் மரத்தையும், கம்பத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்ததில் அந்தப் பகுதியிலுள்ள மின் கம்பிகள் சேதமடைந்ததால் 4 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. அதன் பிறகு மின் வாரிய பணியாளா்கள் விரைந்து எடுத்த நடவடிக்கையால் மின் விநியோகம் சீரானது.

3 நாள்களுக்குப் பிறகு மின் விநியோகம்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பூண்டி, கவுஞ்சி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 3 நாள்களாக பலத்த காற்றுடன் பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் வனப் பகுதிகளில் சேதமடைந்திருந்த மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து 3 நாள்களுக்குப் பிறகு இந்த கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்கள் கொடைக்கானல் மின் வாரிய பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்தனா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க