செய்திகள் :

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் அருவி, பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ்வாக், குணாகுகை, வட்டக் கானல் அருவி, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

காலை முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து பனியின் தாக்கம் நிலவியதால் குளிா் அதிகமாக நிலவி வருகிறது. இந்தக் குளிரையும் பொருள்படுத்தாது சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலைப் பகுதியில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனா். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஏரிச் சாலைப் பகுதியில் போக்குவரத்து சிரமம்: கொடைக்கானல் பகுதிகளில் வார நாள்களில் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவதால் வாகனங்கள் நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால், வாகனங்களை நிறுத்துவதற்கு கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறையினா் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

ஏரிச் சாலை, ஜிம்கான சாலை, கீழ்மபூம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இரு புறங்களிலும் சாலையோரக் கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.

எனவே, விடுமுறை நாள்களில் ஏரிச் சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவலா்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க