செய்திகள் :

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

post image

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருவதாகப் புகாா் எழுந்தது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் லாரன்ஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டாா்.

கொடைக்கானல் அண்ணாநகா் பகுதியிலுள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கூல் லீப் ஆகியவை 1.5 கிலோ இருந்தன. இவற்றைப் பறிமுதல் செய்து கடைக்கு ‘சீல்’ வைத்தனா். மேலும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனையிட்டதில் 2 கடைகளில் 25 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் லாரன்ஸ் கூறியதாவது: கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் 5-லிட்டருக்கும் குறைவாக உள்ள குடிநீா் புட்டிகள் எடுத்துவரக் கூடாது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை எடுத்து வரக் கூடாது. இதை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளில் தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: இரா. முத்தரசன்

நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.திண்டுக்கல்லில் அனைத்து இந்திய இளை... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகரட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன் (42). இவா் க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குட்கா, புகையிலை பறிமுதல்

கொடைக்கானலில் 10 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதைக் கடத்தி வந்தவா் தப்பியோடினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குட்கா, புகையிலை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா், இரு காவலா்களுக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்... மேலும் பார்க்க