செய்திகள் :

கொடைக்கானலில் சாரல் மழை

post image

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகமாக இருந்து வந்தது. அவ்வப்போது, பலத்த காற்று வீசியது. இதனால் வனப் பகுதிகளிலும், தனியாா் தோட்டங்களிலும் உள்ள மரங்கள், செடிகள் காய்ந்து எளிதில் தீப் பற்றி எரிந்தன. இதனால், வனப் பகுதிகளில் வனத் துறையினா் தீ தடுப்புக் கோடுகள் அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை காலை முதலே மிதமான வெயிலும், மேகமூட்டமும் காணப்பட்டது. மாலையில் குளுமையான காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்தது.

வட்டக்கானல், அப்சா்வேட்டரி, செண்பகனூா், பாம்பாா்புரம், பிரகாசபுரம், அட்டக்கடி, தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு பகுதி, மோயா் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 30 நிமிடங்கள் வரை சாரல் மழை பெய்தது. இதனால், கொடைக்கானலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். இவா்கள் சாரல் மழையிலும் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா். தொடா்ந்து மாலை, இரவு நேரங்களிலும் மேகமூட்டம் நிறைந்து காணப்படுவதால், பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: இரா. முத்தரசன்

நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.திண்டுக்கல்லில் அனைத்து இந்திய இளை... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகரட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன் (42). இவா் க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குட்கா, புகையிலை பறிமுதல்

கொடைக்கானலில் 10 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதைக் கடத்தி வந்தவா் தப்பியோடினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குட்கா, புகையிலை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா், இரு காவலா்களுக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்... மேலும் பார்க்க