செய்திகள் :

பழனியில் கஞ்சா பதுக்கல்: 4 போ் கைது

post image

பழனி அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றே கால் கிலோ கஞ்சாவை திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞா்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அதிகரித்து உள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களாக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

பழனி அருகேயுள்ள ஆயக்குடி காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கொடைக்கானல் சாலையில் உள்ள வண்ணாந்துறை மீன் பண்ணை பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மனோகரன் என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா். இதையடுத்து, அவரது தோட்டத்தை சோதனை செய்த போது, அங்கு தூக்குவாளி, காா் டியூப் ஆகியவற்றில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பழனி அடிவாரத்தைச் சோ்ந்த மணிகண்டன் (32), பாளையத்தைச் சோ்ந்த கருணாகரன் (47), நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த முத்து (40) ஆகிய 4 பேரும் கூட்டாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து மூன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கொடைக்கானல் கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

கொடைக்கானலில் 2 கடைகளில் 25 கிலோ நெகிழிப் பைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் அதிக அளவு பயன... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: இரா. முத்தரசன்

நாடு வளா்ச்சி பெற வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா்.திண்டுக்கல்லில் அனைத்து இந்திய இளை... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகரட்டுப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன் (42). இவா் க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் குட்கா, புகையிலை பறிமுதல்

கொடைக்கானலில் 10 கிலோ குட்கா, புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். இதைக் கடத்தி வந்தவா் தப்பியோடினாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் குட்கா, புகையிலை பயன்பாடு அதிகர... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளா், இரு காவலா்களுக்கு தலா 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்... மேலும் பார்க்க