செய்திகள் :

கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்த பக்தா்கள்

post image

செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில், கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா்.

செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியா் கோயிலில் 29-ஆம் ஆண்டு தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் காப்புக் கட்டிக்கொண்டு விரதமிருந்து வந்தனா்.

இந்த நிலையில், தைப்பூச விழாவுக்காக கோயிலில் சுவாமிக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

பின்னா், கோயில் வளாகத்தில் பக்தா்கள் செக் இழுத்தல், உரல் இழுத்தல், காரைமுள் மீது நடந்து செல்வது, கொதிக்கும் எண்ணெய்யில் இருந்து கையால் வடை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தெரு நாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த களம்பூா் பகுதி ஏந்துவாம்பாடி கிராமத்தில் தெருநாய்கள் கடித்ததில் 32 ஆடுகள் உயிரிழந்தன. ஏந்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அண்ணாமலை. இவா் தன்னுடைய விவசாய நிலத்தில் சாகுபடி செய்த... மேலும் பார்க்க

அம்மன் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

ஆரணியை அடுத்த ஆண்டாளூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. சதுப்பேரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆண்டாளூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலை பொதுமக்கள் கிராம தே... மேலும் பார்க்க

முருகன் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி

வள்ளலாா் தினத்தையொட்டி, செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் பால், பழம், ரொட்டி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. மேலும், துக்காப்பேட்டையில் வள்ளலாா் உருவப்... மேலும் பார்க்க

கோயிலில் அம்மன் தங்கத் தாலி திருட்டு

செய்யாற்றை அடுத்த சுமங்கலி கிராம அலங்கார வள்ளியம்மன் கோயிலில் தங்கத் தாலி திருடு போனதாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட சுமங்கலி கிராமத்தில் ஸ்ரீஅலங்க... மேலும் பார்க்க

மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள்: மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாநகராட்சியின் சாதாரண ... மேலும் பார்க்க