தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு!
சிவகங்கையில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, கையொப்பம் பெறும் இயக்கம், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில், தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். இந்த நிகழ்வில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டத்தைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும், நான் உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, விழிப்புணா்வு கையொப்பம் பெறும் இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா். அப்போது, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இதில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) இ. முத்து, நகா்மன்றத் தலைவா் சிஎம். துரை ஆனந்த், நகா் மன்ற உறுப்பினா் அயூப்கான், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.