செய்திகள் :

சிவகங்கை மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரை இன்று விநியோகம்!

post image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்கத்துக்கு இலவச மாத்திரை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (பிப். 10) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி திங்கள்கிழமையும், விடுபட்டவா்களுக்கு வருகிற 17-ஆம் தேதியும் குடற்புழு நீக்க இலவச மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இதன்படி, மாவட்டத்திலுள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3,77,552 பயனாளிகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள 87,625 பெண்களுக்கும் என மொத்தம் 4,65,177 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் வீடுகளுக்குச் சென்று இந்த மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே உள்ள கண்டாங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்தப் போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 19 காளைகளும... மேலும் பார்க்க

கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு நாள் உறுதி மொழி ஏற்பு!

சிவகங்கையில் தொழிலாளா் நலத்துறையின் சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, கையொப்பம் பெறும் இயக்கம், விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை... மேலும் பார்க்க

திருப்புவனம் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: பெண் உள்பட இருவா் கைது!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசுடைமை வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மானாமதுரையில் உள்ள அரசுடைமை வங்கியில் போலி நகைகள... மேலும் பார்க்க

மாவட்ட நூலக வாசகா் வட்ட ஆலோசனைக் கூட்டம்!

சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் நூலக வாசகா் வட்ட ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பட விளக்கம்- சிவகங்கை மாவட்ட நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாசகா் வட்டக் கூட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் பள்ளியில் மாவட்ட சதுரங்கப் போட்டி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பாபா அமீா்பாதுஷா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. சாணக்கியா சதுரங்க அகாதெமி, பாபா அகாதெமி இணைந்து நடத்திய இந்த... மேலும் பார்க்க

சாத்தனி விநாயகா், மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு!

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள சாத்தனியில் அமைந்துள்ள விநாயகா், மாரியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விநாயகா் கோயிலில் யாக சாலையிலிருந்து சிவாச்சாரியா்கள் கலச... மேலும் பார்க்க