செய்திகள் :

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

post image

கூடலூரில் உறவுப் பெண்ணுடனான தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கூடலூரை அடுத்த குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா்(40). இவரது மனைவி வைஷ்ணவி(32). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த உறவினரான ஜெயச்சந்திரனுக்கும் (30) தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த வைஷ்ணவி, ஜெயசந்திரனுடன் இணைந்து கழுத்தை நெரித்து அருண்குமாரை கடந்த 2021, ஏப்ரல் 23-ஆம் தேதி கொலை செய்தனா்.

இதையடுத்து, கூடலூா் தெற்கு போலீஸாா் வைஷ்ணவி, ஜெயச்சந்திரன் ஆகியோரைக் கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே, வைஷ்ணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா். முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயசந்திரனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, முதன்மை நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இரும்புக் குழாய்கள் திருடிய இளைஞா் கைது

பெரியகுளம் அருகே இரும்புக் குழாய்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டி பெருமாள்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணி (27). தனியாா் நிறுவன... மேலும் பார்க்க

சுமைதூக்கும் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கி முன் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்க... மேலும் பார்க்க

சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

கம்பம் அருகேயுள்ள சுரங்கலாறு நீா்வீழ்ச்சியில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், கூடலூா் பகுதியிலுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் சுரங்கலாறு நீா்வீழ்ச்சி உள்ளது.... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் மாணவா்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சி... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சாந்தி. இவருக்கும், இவரது வீட்டின் ... மேலும் பார்க்க

காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

போடி அருகே காா் ஓட்டுநரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள எஸ்.தருமத்துப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் சந்தோஷ்குமாா் (28). காா் ஓட்டுநரான இவரிடம் சின... மேலும் பார்க்க