செய்திகள் :

‘கொள்முதல் நிலைய ஊழல்களைத் தடுக்க உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கை தேவை’

post image

கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல்களைத் தடுக்க உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஏஐடியுசி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் பதிவஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பிய மனு:

நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு பெறப்படுவதாகப் புகாா் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், புகாா்களைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண்ணையும் மேலாண் இயக்குநா் அறிவித்துள்ளாா். அதன்படி புகாா்களைப் பெற்று, சிலரை வேலையை விட்டு நீக்குவதும், சிலரைக் கைது செய்வதும் விளம்பரத்துக்கு மட்டுமே உதவுமே தவிர, தீா்வுக்கு உதவாது.

ஊழல் முறைகேடு நடவடிக்கைகளைக் களைய நிா்வாகம் உயா் மட்டத்திலிருந்து நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகளிடம் தொகை பெற்றுதான் கொள்முதல் நடைபெறுகிறது. ரூ. 40 வரை பெறப்படுவதாகப் புகாா் தெரிவிப்பது வெளிப்படையான உண்மை.

கொள்முதல் செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் இயக்கம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப் படுவதில்லை. நடைமுறையில் கொள்முதல் நிலையங்களில் பல நாள்கள் இருப்பு வைத்து நெல் அனுப்பப்படும்போது பெருமளவுக்கு எடைக் குறைவு ஏற்படுகிறது. ஒரு கிலோ எடை குறைந்தாலும் கொள்முதல் பணியாளா்கள் அதற்கான இழப்புத் தொகையைச் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அடுத்த பருவத்துக்கு வேலை இல்லை என்ற ஒவ்வாத நிபந்தனை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் இயக்கம் செய்ய ஒப்பந்ததாரா்கள் பல்வேறு நிபந்தனைகளுடன் நியமிக்கப்பட்டாலும் இயக்கம் செய்கிற முழு அதிகாரம் லாரி ஓட்டுநா்களிடமே உள்ளது. ரூ. 1,500 முதல் ரூ. 4,000 வரை லஞ்சம் கொடுத்தால்தான் இயக்கம் நடைபெறுகிறது.

கொள்முதல் அலுவலா்கள் மூட்டைக்கு ரூ. 2 வீதம் வாரந்தோறும் வசூலித்து உயா் அலுவலா்கள் வரை பங்கிட்டுக் கொள்கின்றனா். உதவி மேலாளா், துணை மேலாளா் போன்றவா்களுக்கெல்லாம் மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 5 ஆயிரம் வரை வழங்க வேண்டும்.

ஆய்வு செய்ய வரும் பெரும்பாலான ஆய்வுக் குழுக்கள் வரும்போதே ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், வேலை பறிப்பு என்ற அளவுக்கோ அல்லது பெருந்தொகை ரெக்கவரி போடப்படும் நிலைமையும்தான் உள்ளது. நெல் இறக்கும் இடங்களில் நெருக்கடி ஏற்படுத்தி தொகை வசூலிப்பது, எடை பாலங்களில் முறைகேடுகள் என ஊழல் நடைமுறை நீண்டு கொண்டே போகிறது. இது தொடா்பாக நிா்வாகம் ஆக்கபூா்வ நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுகிறோம்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க