செய்திகள் :

கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம்

post image

படவிளக்கம்: அரியலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில துணைச் செயலா் நா. பெரியசாமி.

அரியலூா், ஜூலை 4: அரியலூா் மாவட்டம், கொள்ளிடத்தின் குறுக்கே மதகுடன் கூடிய தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரியலூரில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். அரியலூா்-கும்பகோணம்-தஞ்சை-சேலம் இணைப்பு புதிய ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயரதர மருத்துவ சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். 100 நாள் வேலையை அதிகரித்து , நாள் கூலியை உயா்த்திட வேண்டும். இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நகா்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் சொ.ராமநாதன் தலைமை வகித்தாா். அரியலூா் ஒன்றியச் செயலா் து. பாண்டியன் முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் மு.அ. பாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாவட்டச் செயலா் இரா. உலகநாதன், மாவட்ட துணைச் செயலா் கலியபெருமாள், மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். முன்னதாக முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.தண்டபாணி வரவேற்றாா். மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநாட்டை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சின்ன ஆனந்தவாடி கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா, கடந்த 15 நாள்களுக்கு முன்பு பாரதம் படிக்கும் நி... மேலும் பார்க்க

நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான வி... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் திறப்பு

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு, தா.பழூரில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம், விக்கிரங்கலத்தில் புதிய துணை வேளாண் விரி... மேலும் பார்க்க

வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் சுமூகமாக தீா்வு காண அழைப்பு

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது வழக்குகளுக்கு சுமூக தீா்வு காணலாம். இதுகுறித்து மாவட... மேலும் பார்க்க

அரியலூா் அருகே ரயில் சுரங்கப்பாதையில் மண் சரிவு: 2 ரயில்கள் தாமதம்

அரியலூரை அடுத்த வெள்ளூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயில், சென்னை-நாகா்கோவில் வந்தேபாரத் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம... மேலும் பார்க்க

அரியலூரில் சுகாதார நிலையங்கள் திறப்பு

அரியலூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம், ஆண்டிமடத்தை அடுத்த பெரியாத்துக்குறிச்சியில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க