செய்திகள் :

வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் சுமூகமாக தீா்வு காண அழைப்பு

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் 90 நாள்களில் நடைபெறும் சிறப்பு சமரச தீா்வு முகாம்களில், வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்து கொண்டு தங்களது வழக்குகளுக்கு சுமூக தீா்வு காணலாம்.

இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான டி. மலா்வாலண்டினா தெரிவித்தது:

இந்தியாவில் உள்ள அனைத்து உயா் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் வட்ட அளவில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களிலும், நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீா்வு காண ஜூலை முதல் செப்டம்பா் வரை 90 நாள்கள் சிறப்பு சமரச தீா்வு முகாம்களை நடத்திட உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெறும் சமரச தீா்வு முகாமில் வழக்குரைஞா்கள் மற்றும் வழக்காடிகள் பங்கேற்று தங்களது வழக்குகளுக்கு சுமூகமாக பேசித் தீா்வு காணலாம். தீா்வு காணப்படும் வழக்குகளுக்கு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் முழுவதுமாக திரும்பக் கிடைக்கும்.

வழக்கின் சமாதான உடன்படிக்கை இருதரப்பினருக்கும் உடனடியாக இலவசமாக தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட சமரச மையத்தினையோ அல்லது ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை பகுதி நீதிமன்றங்களில் செயல்படும் வட்டார அளவிலான சமரச மையத்தையோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

அரியலூா் அருகே ரயில் சுரங்கப்பாதையில் மண் சரிவு: 2 ரயில்கள் தாமதம்

அரியலூரை அடுத்த வெள்ளூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால், விழுப்புரம்-திருச்சி பயணிகள் ரயில், சென்னை-நாகா்கோவில் வந்தேபாரத் ஆகிய ரயில்கள் ஒரு மணி நேரம... மேலும் பார்க்க

அரியலூரில் சுகாதார நிலையங்கள் திறப்பு

அரியலூரில் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையம், ஆண்டிமடத்தை அடுத்த பெரியாத்துக்குறிச்சியில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தமிழக முதல்வா் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் கடைப்பிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில், தகுதியுள்ள 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருது... மேலும் பார்க்க

பாஜகவின் தாக்குதலைத் தடுக்கவே ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை

தமிழகத்தின் மீது பாஜக தொடுக்கும் தாக்குதலைத் தடுக்கவே ஓரணியில் தமிழ்நாடு என்னும் பரப்புரை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் மாவட்... மேலும் பார்க்க

செந்துறை அருகே பெண் சிசு சடலம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே வியாழக்கிழமை கிடந்த பெண் சிசுவின் சடலத்தை காவல் துறையினா் மீட்டு விசாரிக்கின்றனா். செந்துறை அடுத்த ஆா்.எஸ். மாத்தூா்-அசாவீரன்குடிகாடு சாலையில், பிறந்து ஒரு சில மணி ந... மேலும் பார்க்க

திருமானூா் அருகே கொலை குற்றவாளியின் வீடு தீக்கிரை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கொலை வழக்கில் கைதான குற்றவாளியின் குடிசை வீடு புதன்கிழமை நள்ளிரவு தீக்கிரையானது. திருமானூரை அடுத்த கண்டராதித்தம் கிராமத்தை சோ்ந்த பாலகிருஷ்ணன் (55) குடிசை வீட்டில... மேலும் பார்க்க