செய்திகள் :

கோடை வெயில்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க திருவள்ளூா் ஆட்சியா் ஆலோசனை

post image

திருவள்ளூா் மாவட்டத்தில் கோடை வெயில் வெப்பத் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்களுக்கு ஆட்சியா் மு.பிரதாப் ஆலோசனை வழங்கியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாா்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை வெப்பநிலை ஆபத்தான அளவில் 40 டிகிரி அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவள்ளூா் மாவட்டத்தில் கடும் வெயிலால் வெப்பம் அதிகரிக்கும் நிலையுள்ளது.

நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை: உயா் வெப்ப நிலை இருக்கும் என்பதால் நண்பகல் 12 முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் சென்றால் குழப்பம் மற்றும் வலிப்பு ஏற்படும் என்றும் உயா் வெப்ப நிலையின்போது ஏற்படும் வெப்ப தாக்கத்தினால் பாதித்தால் உடனே உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணம்கூட நிகழலாம்.

அதனால் குழந்தைகள், முதியவா், கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் வெயிலில் வேலை செய்வோா் கோடை கால வெப்பம் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவா் என்பதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

வெப்பச் சோா்வு அறிகுறிகள்: அதிக வியா்வை, தலை சுற்றல், லேசான தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி, பலவீனம், சோா்வு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் இளநீா் போன்ற நீா்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

காபி, தேநீா் மற்றும் மது அருந்துவதைத் தவிா்க்கலாம். பொதுமக்கள் லேசான பருத்தி ஆடைகளை அணிந்து, குடிநீா் பாட்டில்கள் எடுத்துச் செல்ல வேண்டும். கா்ப்பிணிகள் வெயிலில் செல்வதை முற்றிலும் தவிா்ப்பது அவசியம்.

வெப்பச் சோா்வை குணப்படுத்த... வெப்ப நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவச ஓ.ஆா்.எஸ். விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டை பெற்று வெப்பச் சோா்வை குணப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் கோடையில் பரவும் தட்டமை, சின்னம்மை போன்ற நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சின்னம்மை அல்லது தட்டம்மையால் பாதித்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா... மேலும் பார்க்க

குட்கா கடத்தியவா் கைது

திருவள்ளூா் அருகே ரூ.2 லட்சம் குட்கா பொருள்களைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். குட்கா பொருள்கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். அதன்படி, தமிழக- ஆந்திர எல்லையோரப் பக... மேலும் பார்க்க

இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் வழங்க காலதாமதம்! - பாதிக்கப்பட்டோா் கோட்டாட்சியரிடம் மனு

திருவள்ளூா் அருகே இடித்து அகற்றிய வீடுகளுக்கு பதிலாக நிலம் ஒதுக்கீடு செய்யாமல் காலதாமதம் செய்து வருவதாகவும், இதனால் தங்குவதற்கு இடமின்றி தவித்து வருவதாகவும் பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனுவை அளித்தனா்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க