செய்திகள் :

`கோட் சூட், சீருடை, கட்சி மஃப்ளர்..' -திருச்சியில் நடக்க உள்ள மதசார்பின்மை பேரணி குறித்து திருமா

post image

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நாளை மறுநாள் (ஜூன் 14) திருச்சியில் 'மதச்சார்பின்மை காப்போம்' பேரணி நடக்க உள்ளது.

இந்தப் பேரணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சங்கள் மற்றும் வேண்டுகோள்...

"திருச்சி என்பது மையப் பகுதி. நான்கு முனைகளில் இருந்தும் மக்கள் வந்துசேர எளிதாக இருக்கும் என்பதால் இந்தப் பேரணி திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் அலங்கார ஊர்திகளுக்கு அடுத்ததாக கோட் சூட் அணிந்தவர்கள் வருவார்கள். அடுத்ததாக, சீருடை அணிந்த பெண்கள் அணிவகுத்து வருவார்கள்.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்தப் பேரணிக்கு வரும் அனைவரும் கட்டாயம் நீலச் சட்டை அணிந்து வர வேண்டும். இத்துடன் கட்சி மஃப்ளர் அணிந்து வர வேண்டும்" உள்ளிட்டவைகள் கூறப்பட்டுள்ளன. வி.சி.க நடத்தும் இந்தப் பேரணியின் முக்கியக் கொள்கையே மதசார்பின்மையை வலியுறுத்துவது ஆகும்.

அடுத்து ஆண்டு (2026), தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில், அனைத்து கட்சிகளும், தேர்தல் வேலைகள், கூட்டணி பேச்சுவார்த்தை என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறன.

நேற்று கூட, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி அதிமுக - பாஜக மெகா கூட்டணியில் இணையும் என்று கூறியிருந்தார். இதற்கு, 'திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சி கூட அதிமுக - பாஜக கூட்டணியில் அமையாது' என்று திருமாவளவன் பதில் அளித்திருக்கிறார்.

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க

``ஈபிஎஸ் சுயமாக சிந்திக்கக்கூடியவர், பாஜக உடன் இறுதிவரை இருப்பாரா?'' - சபாநாயகர் அப்பாவு

நெல்லையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளோடு பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு நே... மேலும் பார்க்க

``அன்புமணி கண்ணைக் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார்; இதுதான் தலைவிதி..'' - வெடித்த ராமதாஸ்

பாமக கட்சிக்குள் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.அவர் பேசிவருவதாவது...'தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வ... மேலும் பார்க்க

``4 ஆண்டுகளில் 458 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி..'' - வேளாண் கருத்தரங்கில் முதல்வர்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் சார்பில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த... மேலும் பார்க்க