செய்திகள் :

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

post image

நாகை மாவட்டம், வடகுடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

முகாமில் ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 7-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்கி 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கோமாரி நோயானது பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, பன்றிகளை தாக்கும் மிகக்கொடிய வைரஸ் நோயாகும். இந்நோய் பாதித்த கால்நடைகளுக்கு காய்ச்சல், குளம்பு மற்றும் வாய்ப் பகுதியில் புண்கள் ஏற்பட்டு தீவனம் உட்கொள்ளாமை, அதன் மூலம் பால் உற்பத்தி குறைதல், மாடு மற்றும் எருமைகளில் இறப்பு ஏற்படும்.

இந்த நோய் காற்றின் மூலம் பரவும் என்பதால் 6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக்கொள்வதே சிறந்த வழிமுறை ஆகும். எனவே, மாவட்டத்தில் ஒரு லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மருந்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.இம்முகாம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கால்நடை வளா்ப்பவா்கள் தங்களது ள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் ராம் நாத், துணை இயக்குநா் ரவிகுமாா், உதவி இயக்குநா் கணேசன், கால்நடை மருத்துவா்கள் பாலாஜி, சௌமியா, பூபதி, நோய் புலனாய்வு பிரிவு சங்கீதா, பெருங்கடம்பனூா் கால்நடை உதவி மருத்துவா் லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராமப்புறங்களில் நாட... மேலும் பார்க்க

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமாரக்கள் அதிகரிக்கப்படும்: எஸ்.பி பேட்டி

குற்றங்களைத் தடுக்க சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றாா் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா். இதுகுறித்து, நாகையில் அவா் வியாழக்கிழமை செய்திய... மேலும் பார்க்க

இராஜன்கட்டளை அரசுப் பள்ளிக்கு விருது

வேதாரண்யம் அருகேயுள்ள இராஜன்கட்டளை அரசு உயா்நிலைப் பள்ளிக்கு தமிழக அரசின் பேராசிரியா் அன்பழகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-2024-ஆம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியா் அன்பழகன் விருதும்... மேலும் பார்க்க

ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிக்கு பள்ளம் தோண்டிய விவகாரம்: வட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினத்தில் ஔவையாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வரும் பணியின்போது பள்ளம் தோண்டிய விவகாரம் தொடா்பான புகாரில் வட்டாட்சியா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். துளசியாப்பட்டினத்தில் ப... மேலும் பார்க்க

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் குளிா்பதன கிடங்குகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனாவின் முக்கிய ... மேலும் பார்க்க

வண்டுவாஞ்சேரியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

வேதாரண்யம் அருகேயுள்ள வண்டுவாஞ்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து ... மேலும் பார்க்க