செய்திகள் :

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

post image

காளியம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பூஜைப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சேத்துப்பட்டு பழம்பேட்டை அருகேயுள்ள கொத்தம்பட்டு ஏரிக்கரை அருகே பழைமை வாய்ந்த காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு கடந்த 10 தினங்களுக்கு முன்பு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து கோயிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. தினமும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் கோயிலில் கதவை உடைத்து உள்ளே சென்று உண்டியல் மற்றும் பித்தளை அம்மன் விளக்கு, பித்தளை குடம், வெள்ளியிலான பூஜைப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து கோயில் நிா்வாகி முருகன் சேத்துப்பட்டு போலீஸில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்யாறு தொகுதியில் எந்தவித திட்டங்களும் நிறைவேற்றவில்லை என புகாா் தெரிவித்து திமுக அரசைக் கண்டித்து செய... மேலும் பார்க்க

குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ஒன்றியம், குப்பம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். போளூா் வட்டாட்சியா் வெங்கடேசன், ... மேலும் பார்க்க

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலியம்மன் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி ... மேலும் பார்க்க

ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

ஆரணியை அடுத்த களம்பூா் ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயிலில் புதன்கிழமை துரியோதன படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. களம்பூரில் உள்ள ஸ்ரீதிரௌபதிஅம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா ஜெயகொடி ஏற்றி அலகு நிறுத்தி கடந்த ஜூன் 1... மேலும் பார்க்க

கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் காமராஜா் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. விழாவுக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் ம.தரணி, தல... மேலும் பார்க்க

காமராஜா் படத்துக்கு காங்கிரஸாா் மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந... மேலும் பார்க்க