ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ சீருடையில் விமானி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மனைவி!
கோயில் ஊழியா்களுக்கு பாராட்டு
திருமருகல்: திருப்புகலூா் அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தின்போது சிறப்பாக பணியாற்றிய பணியாளா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்புகலூா் திருக்கைலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான கருந்தாழ் குழலி அம்பாள் சமேத அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது சிறப்பாக பணிபுரிந்த கோயில் அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஆதீன மடத்தின் சாா்பில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனம் 18- ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் பரிசுப் பொருட்கள், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன. ஆதீன இளவரசு ஸ்ரீஅஜபா நடேஸ்வர சுவாமிகள் உடனிருந்தாா்.