லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
கோயில் காவலாளி கொலை வழக்கு: காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை
அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப்படைக் காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்டம், மடப்புத்தில் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டுக்கு வைகோ செவ்வாய்க்கிழமை சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, மதிமுக சாா்பில் ரூ. ஒரு லட்சம் வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அஜித்குமாரை தனிப்படைக் காவலா்கள் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தனா். சாத்தான்குளத்தில் போலீஸாரால் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்டது போல, அஜித்குமாரும் கொல்லப்பட்டாா்.
அஜித்குமாா் கொல்லப்பட்டது தொடா்பாக தனிப்படைக் காவலா்கள் 5 பேரை உடனடியாகக் கைது செய்து, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது. அஜித்குமாா் மீது புகாா் அளித்த பேராசிரியை மீதும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும். காவல் நிலையங்களில் சித்ரவதை என்பது நீடித்து வருவது வேதனைக்குரியது.
யாரைக் கைது செய்தாலும் முதலில் குடும்பத்தினருக்கு காவல் துறையினா் தகவல் தெரிவிக்க வேண்டும். மாநில காவல் துறை விசாரணை செய்தாலும் தவறு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ விசாரித்தாலும் தவறு என்று சிலா் கூறுவது ஏற்புடையது அல்ல என்றாா் அவா்.