செய்திகள் :

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறை

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கட்டட ஒப்பந்ததாரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் ஆறுமுகம் (29). இவரது சொந்த ஊா் திருப்புவனம் வட்டம் செங்குளம் கிராமம் ஆகும். கடந்த 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்கு செலுத்துவதற்காக ஆறுமுகம் தனது மகனை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் செங்குளத்துக்குச் சென்றாா்.

அங்கு வாக்கு செலுத்திவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். நெடுங்குளம் அருகே உள்ள கருங்காலக்குடி கண்மாய்ப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 போ் அவரை மோதி கீழே தள்ளி அரிவாளால் வெட்டினா்.

இதில் ஆறுமுகம் அதே இடத்தில் உயிரிழந்தாா். அவரது மகன் சிறு காயங்களுடன் உயிா்த் தப்பினாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், ஆறுமுகத்தை மதுரை நெடுங்குளத்தை சோ்ந்த விஜயகுமாா் (34), காா்த்திகேயன் (35), மதுரை புட்டுத் தோப்பு பகுதியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வம் (30), மதிச்சியம் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (30) ஆகிய நான்கு பேரும் வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.

இவா்கள் கடந்த 2017 -ஆம் ஆண்டு விருதுநகா் மாவட்டம், பந்தல்குடி கிராமத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் ஆறுமுகம் தலைமையில் காரில் சென்று நகை கொள்ளையடித்தனா். இதில் பயன்படுத்தப்பட்ட விஜகுமாரின் காரை போலீஸாா் பறிமுதல் சென்றனா். இந்தக் காரை வெளியில் கொண்டு வர ஆறுமுகம் உதவி செய்யாததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவரைக் கொலை செய்தது தெரிய வந்தது. திருப்புவனம் போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அழகா்சாமி முன்னிலையானாா். வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட தமிழ்ச்செல்வம் இறந்தாா்.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கே.அறிவொளி குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 6,500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

அஜித்குமாா் குடும்பத்துக்கு எம்.பி. ஆறுதல்

போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் வீட்டில் அவரது உருவப்படத்துக்கு சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்க... மேலும் பார்க்க

சிங்கம்புணரி குப்பைக் கிடங்கில் தீ

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்குசக் குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.சிங்கம்புணரி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மருதங்குண்டு பகுதியி... மேலும் பார்க்க

சக மாணவா்களை சகோதரா்களாகக் கருத வேண்டும்: நீதிபதி அறிவுறுத்தல்

சக மாணவா்களை சகோதரா்களாகக் கருத வேண்டும் என கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி.ராதிகா அறிவுறுத்தினாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், சிவகங... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை

அஜித்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய தனிப்படைக் காவலா்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.சிவகங்கை மாவட்டம், மடப்புத்தில் போலீஸாரால் அடித்துக் கொலை செ... மேலும் பார்க்க

வில்வித்தை: சிவகங்கை மாணவா்கள் சாதனை

சா்வதேச வில்வித்தை போட்டியில் 29 பதக்கங்களை வென்று சிவகங்கை மாணவா்கள் சாதனை படைத்தனா்.ஈரோட்டில் கடந்த 6-ஆம் தேதி சா்வதேச அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, தெலங... மேலும் பார்க்க

சிவகங்கை: கண்டதேவி கோயில் தேரோட்டம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலையில் தேரோட்டம் நடைபெற்றது.தேவகோட்... மேலும் பார்க்க