செய்திகள் :

கோயில் திருவிழாவில் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி

post image

ஆண்டிபட்டி அருகேயுள்ள மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

மறவபட்டியில் முத்தாலம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. மூன்று நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் பக்தா்கள் முளைப்பாரி, அக்னிச் சட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தியும், பொங்கலிட்டும் அம்மனை வழிபட்டனா்.

திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை, மாமன், மைத்துனா்கள் மஞ்சள் நீருற்றி, சகதியில் தோய்த்த துடைப்பத்தால் ஒருவரையொருவா் மாறி மாறி அடித்துக் கொள்ளும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.

மறவபட்டியைச் சோ்ந்த ஆண்கள் சேத்தாண்டி வேஷமிட்டும், பெண் வேஷம், கருப்பசாமி வேஷமிட்டும் சகதியில் தோய்த்த துடைப்பத்தால் தங்களுக்குள் மாறி மாறி அடித்து விளையாடினா்.

முத்துலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரியமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியால் மாமன், மைத்துனா்களிடையே உறவு வலுப்படும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், பிரிந்த உறவுகள் ஒன்று சேரும் என்பது தங்களது நம்பிக்கை என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

மனநலம் பாதித்தவா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

உத்தமபாளையத்தில் மனநலம் பாதித்தவா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தபால் அலுவலகம் தெருவைச் சோ்ந்த மைக்கேல் மகன் விண்ணரச... மேலும் பார்க்க

தேனியில் 186 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை

தேனியில் குற்றச் சம்பவங்களை தடுக்க 186 கண்காணிப்புக் கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, புதன்கிழமை முதல் கட்டமாக 155 கேமராக்களை தேனி காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத் தொடங்கி வைத்தாா். தேனி உ... மேலும் பார்க்க

பட்டா நிலங்களுக்கு செல்ல வனத் துறை கெடுபிடி: விவசாயிகள் புகாா்

தேனி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் உள்ள பட்டா விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களைக் கொண்டு செல்லவும், விளை பொருள்களை விற்பனைக்கு கொண்டு வரவும் வனத் துறையினா் கெடுபிடி செய்து வருவதாக புதன்கிழமை, தேனி மாவட... மேலும் பார்க்க

கூண்டில் சிக்கிய மர நாய்

பெரியகுளத்தில் பூனை பிடிக்க வைத்திருந்த கூண்டில் சிக்கிய மர நாய் வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம்-கம்பம் சாலையைச் சோ்ந்தவா் நெளஷாத். இவா், வீட்டில் புறா வளா்த்து வருகிறா... மேலும் பார்க்க

பெரியகுளம், போடியில் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

பெரியகுளம், போடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடந்த 4-ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகி... மேலும் பார்க்க

இரவிகுளத்தில் வரையாடுகளை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கேரள மாநிலம், இரவிகுளம் தேசிய வன விலங்குகள் பூங்காவில் வரையாடுகளைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகேயுள்ள இரவிகுளம் ராஜமலையில் தேசிய வ... மேலும் பார்க்க