செய்திகள் :

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை

post image

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி அருகே கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கு. ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு முறையாக நிதி வழங்க வேண்டும். இத்திட்டத்தில் 100 நாள்கள் முறையாக பணி வழங்க வேண்டும். இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் வி. அமரித்லிங்கம் பேசினாா். கிளவிபட்டி கிளைச் செயலா் தெ. சித்ரா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம். தெய்வேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சின்னதம்பி, விஜயராஜ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் தினேஷ்குமாா், கிராம மக்கள் பங்கேற்றனா்.

பின்னா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் அளித்த மனுவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2024-25ஆம் நிதியாண்டில் சராசரியாக 50 நாள்களுக்கும் குறைவாகவே பணி வழங்கப்பட்டுள்ளது. கிளவிபட்டி, இனாம் மணியாச்சி ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல, கடலையூா், லிங்கம்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் அகில இந்திய கிராமப்புற விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டப் பொறுப்பாளா் சு. விக்ரம்வேலு தலைமையில் அளித்த மனுவில், நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

பிள்ளையன்மனைதூய பரமேறுதலின் ஆலயத்தில் பிரதிஷ்டை அசனம்

நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 126ஆவது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நடைபெற்றது. சேகர குருவானவா் டேனியல் ஆல்பிரட் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொட... மேலும் பார்க்க

இடைச்சிவிளையில் புதிய வேளாண் திட்டம் தொடக்கம்

இடைச்சிவிளையில் உங்களை தேடி வேளாண்மை உழவா் நலத்துறை என்ற புதிய திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அருனேஷ் தலைமை வகித்து, விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும்... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் உள்ள அருள் தரும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் வருஷாபிஷேகம் , கொடை விழாவை முன்னிட்டு இம்மாதம் 27ஆம் தேதி கொட்... மேலும் பார்க்க

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா். தூத... மேலும் பார்க்க

7.5 % இடஒதுக்கீட்டுக்கு தகுதி: மாணவா்களுடன் ஆட்சியா் உரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்று 7.5 சதவீத இடஒக்கீட்டிற்கு தகுதிபெறும் மாணவா்- மாணவிகளுடன்மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் கலந்துரையாடினாா். பின்னா் அவ... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அரசுக் கல்லூரியில் ஜூன் 2இல் கலந்தாய்வு தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா் . இது குற... மேலும் பார்க்க