பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறையாக பணி வழங்கக் கோரி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி அருகே கிளவிபட்டி, இனாம் மணியாச்சி கிராமங்களைச் சோ்ந்த பெண்கள் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கு. ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு முறையாக நிதி வழங்க வேண்டும். இத்திட்டத்தில் 100 நாள்கள் முறையாக பணி வழங்க வேண்டும். இனாம் மணியாச்சி ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் வி. அமரித்லிங்கம் பேசினாா். கிளவிபட்டி கிளைச் செயலா் தெ. சித்ரா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம். தெய்வேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சின்னதம்பி, விஜயராஜ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் தினேஷ்குமாா், கிராம மக்கள் பங்கேற்றனா்.
பின்னா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் அளித்த மனுவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2024-25ஆம் நிதியாண்டில் சராசரியாக 50 நாள்களுக்கும் குறைவாகவே பணி வழங்கப்பட்டுள்ளது. கிளவிபட்டி, இனாம் மணியாச்சி ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
இதேபோல, கடலையூா், லிங்கம்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் அகில இந்திய கிராமப்புற விவசாயிகள் தொழிலாளா் சங்க மாவட்டப் பொறுப்பாளா் சு. விக்ரம்வேலு தலைமையில் அளித்த மனுவில், நூறு நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.