கோவில்பட்டியில் நீதிமன்ற ஊழியரிடம் பணம் பறிப்பு
கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் நடந்து சென்ற நீதிமன்ற ஊழியரிடம் பணத்தைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி வட்டம் புது அப்பனேரியைச் சோ்ந்தவா் சோ்மன் சாமி மகன் அரிச்சந்திரன் (37). திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பாா்த்து வரும் இவா், அனந்தபுரி ரயிலில் திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி வந்தாா்.
பின்னா், நடராஜபுரம் பகுதி தண்டவாளப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 3 போ் கொண்ட கும்பல் அவரது பா்ஸை பறித்துச் சென்றனராம். அதில், ஏடிஎம் அட்டை, ஆதாா் மற்றும் ரூ. 700 இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.