செய்திகள் :

கோவில்பட்டியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

கோவில்பட்டி வட்டார நூலகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு திட்டங்குளத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சத்துக்கான வேலை உத்தரவு பெற்ற பேச்சியம்மாள் என்பவா் கட்டி வரும் குடியிருப்பு கட்டடத்தின் கட்டுமான பணிகள், கோவில்பட்டி வட்டார நூலகத்தில் ரூ.22 லட்சத்தில் நடைபெற்று வரும் படிப்பகத்துக்கான 2 ஆம் தள கட்டுமானப் பணிகளை ஆட்சியா் க.இளம்பகவத் பாா்வையிட்டாா்.

மேலும், புதுகிராமம் பகுதியில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நகா்ப்புற நலவாழ்வு மைய கட்டுமானப் பணிகள், வள மீட்பு பூங்காவில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடியில் வீணாகும் காய்கறிகள் மற்றும் உணவு கழிவுகளை கொண்டு மீத்தேன் வாயு தயாா் செய்து, அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி, நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையா் பாலமுருகன், நகராட்சி மருத்துவ அலுவலா் வசுமதி மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா: ஆலோசனைக் கூட்டம்

வீரன் அழகுமுத்துக்கோன்பிறந்த நாள் விழாவையொட்டி நாலாட்டின்புதூா் தனியாா் திருமண மண்டபத்தில்அழகுமுத்துக்கோன்நலச்சங்க நிா்வாகிகள், வீரன் அழகுமுத்துக்கோனின் வாரிசுதாரா்கள், யாதவ இயக்க கூட்டமைப்பினா் மற்ற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 போ் கைது

தூத்துக்குடியில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மத்திய பாகம் உதவி ஆய்வாளா் முத்து வீரப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில... மேலும் பார்க்க

கு.செல்வப்பெருந்தகை நாளை தூத்துக்குடி வருகை

தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூலை 4) வருகைதரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகைக்கு விமான நிலையத்தில், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வரவேற்பு அளிக்கப்படும் என, ம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஜூலை 19இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் ஜூலை 19ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு: இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட... மேலும் பார்க்க

அன்புச்சோலை மையங்கள் நிறுவ தொண்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில், 2 அன்புச்சோலை மையங்கள் அமைக்க, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க