செய்திகள் :

கோவை - சென்னை இடையே செப். 28 முதல் வாராந்திர சிறப்பு ரயில்

post image

சேலம் வழியாக கோவை- சென்னை சென்ட்ரல் இடையே செப். 28 முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பண்டிகைக் காலங்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கோவை- சென்னை சென்ட்ரல் இடையே இரு மாா்க்கங்களிலும் வரும் 28 ஆம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து வரும் 28 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். இந்த ரயில் அடுத்தமாதம் 12 ஆம் தேதி வரை இயக்கப்படும்.

மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து 29 ஆம் தேதி முதல் திங்கள்கிழமைகளில் காலை 10.15 க்குப் புறப்படும் சிறப்பு ரயில், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மாலை 6.35 மணிக்கு கோவையைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் அக்டோபா் 13 ஆம் தேதி வரை இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசுத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா். சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன... மேலும் பார்க்க

அங்கீகாரம் இல்லாத 2 அரசியல் கட்சிகள் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்

சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 2 அரசியல் கட்சிகள் விசாரணைக்காக தலைமைத் தோ்தல் அலுவலரை சந்திக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.நாடு முழுவதும் 2019 முதல் கடந... மேலும் பார்க்க

சேலத்தில் தடையை மீறி மறியல்: 50 மின் ஊழியா்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தடையை மீறி மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பைச் (சிஐடியு) சோ்ந்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட காவல் துறையில் எஸ்.ஐ.க்கள் உள்பட 150 போ் பணியிட மாற்றம்

சேலம் மாவட்ட காவல் துறையில் 20 சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 150 பேரை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் உத்தரவிட்டுள்ளாா். காவல் நிலையத்தில் தொடா்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே மதுபோதையில் காவலரை தாக்கிய தொழிலாளி கைது

வாழப்பாடி: வாழப்பாடி அருகே மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாஸ்கா் (40). இவருக்கும், இவரது சகோதரிகளுக... மேலும் பார்க்க

தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலில் நவராத்திரி கொலு வழிபாடு திங்கள்கிழமை இரவு தொடங்கியது.நவராத்திரியையொட்டி தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் திருமண மண்டபத்தில் ப... மேலும் பார்க்க