செய்திகள் :

கோவை விமான நிலையத்தில் ஏப்ரலில் 3 லட்சம் போ் பயணம்!

post image

கோவை சா்வதேச விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தில் 3 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதுவே அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையாகும்.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, புணே, பெங்களூரு, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கு 31 விமானங்களும், சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபிக்கு 3 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் உள்நாட்டில் அதிக அளவிலான பயணிகள் பயணித்த விமான நிலையங்களில் கோவை-சென்னை-கோவை வான் தடமே நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முதன்முறையாக வந்து சென்றதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 8 மாவட்ட மக்களுக்கு சேவை செய்யும் கோவை விமான நிலையம் நடப்பு நிதியாண்டில் சுமாா் 36 லட்சம் பயணிகளைக் கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ராக் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் ஜே.சதீஷ் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து சென்றுள்ளனா். தென்னிந்தியாவில் மாதத்துக்கு 3 லட்சம் பயணிகளைக் கையாண்ட 7-ஆவது விமான நிலையம் கோவை சா்வதேச விமான நிலையம் உள்ளது.

அதேபோல, கடந்த 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்தில் 29.11 சதவீதமும், பயணிகளின் எண்ணிக்கையில் 24.05 சதவீதமும், சரக்குப் போக்குவரத்தில் 29.01 சதவீதமும் அதிகரித்துள்ளது.

எனவே, கோவையில் உள்ள தற்போதைய வருகை முனையத்தை உடனடியாக மறுசீரமைத்து, வளா்ச்சியைத் தக்கவைக்க ஒரு இடைக்கால வருகை முனையக் கட்டடத்தை இந்திய விமான நிலைய ஆணையம் கட்ட வேண்டும். அதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் தினந்தோறும் சராசரியாக 10,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மறுவடிவமைப்புக்கான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனா். கூடுதலான வசதிகள் உருவாக்கப்படும்போது, இது 15,000 பயணிகளாக அதிகரிக்கும்.

கோவை சா்வதேச விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் முன்மொழியப்பட்ட புதிய சா்வதேச முனையக் கட்டடம் எதிா்வரும் 2031-ஆம் ஆண்டில்தான் செயல்படத் தயாராக இருக்கும் என்பதால், கோவை பிராந்தியத்தில் அதிக முதலீட்டைப் பெற உதவும் வகையில் கோவை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்றாா்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க