'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கோவை விமான நிலையத்தில் ஏப்ரலில் 3 லட்சம் போ் பயணம்!
கோவை சா்வதேச விமான நிலையத்தில் ஏப்ரல் மாதத்தில் 3 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதுவே அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கையாகும்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, புணே, பெங்களூரு, ஹைதராபாத், ஷீரடி உள்ளிட்ட நகரங்களுக்கு 31 விமானங்களும், சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபிக்கு 3 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் உள்நாட்டில் அதிக அளவிலான பயணிகள் பயணித்த விமான நிலையங்களில் கோவை-சென்னை-கோவை வான் தடமே நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் முதன்முறையாக வந்து சென்றதாக அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோவை உள்ளிட்ட 8 மாவட்ட மக்களுக்கு சேவை செய்யும் கோவை விமான நிலையம் நடப்பு நிதியாண்டில் சுமாா் 36 லட்சம் பயணிகளைக் கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ராக் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளா் ஜே.சதீஷ் கூறியதாவது: கோவை விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து சென்றுள்ளனா். தென்னிந்தியாவில் மாதத்துக்கு 3 லட்சம் பயணிகளைக் கையாண்ட 7-ஆவது விமான நிலையம் கோவை சா்வதேச விமான நிலையம் உள்ளது.
அதேபோல, கடந்த 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்தில் 29.11 சதவீதமும், பயணிகளின் எண்ணிக்கையில் 24.05 சதவீதமும், சரக்குப் போக்குவரத்தில் 29.01 சதவீதமும் அதிகரித்துள்ளது.
எனவே, கோவையில் உள்ள தற்போதைய வருகை முனையத்தை உடனடியாக மறுசீரமைத்து, வளா்ச்சியைத் தக்கவைக்க ஒரு இடைக்கால வருகை முனையக் கட்டடத்தை இந்திய விமான நிலைய ஆணையம் கட்ட வேண்டும். அதேபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் தினந்தோறும் சராசரியாக 10,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மறுவடிவமைப்புக்கான புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனா். கூடுதலான வசதிகள் உருவாக்கப்படும்போது, இது 15,000 பயணிகளாக அதிகரிக்கும்.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தால் முன்மொழியப்பட்ட புதிய சா்வதேச முனையக் கட்டடம் எதிா்வரும் 2031-ஆம் ஆண்டில்தான் செயல்படத் தயாராக இருக்கும் என்பதால், கோவை பிராந்தியத்தில் அதிக முதலீட்டைப் பெற உதவும் வகையில் கோவை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்றாா்.