செய்திகள் :

கோவையில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது!

post image

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் கோவையில் புதன்கிழமை (ஜூலை 9) பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்று சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசின் தனியாா் பெருநிறுவன ஆதரவு கொள்கையின் விளைவாக தொழிலாளா்களின் உரிமைகள் தொடா்ந்து பறிபோய் வருகின்றன. விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி காரணமாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

இந்தப் பிரச்னைகளைத் திசை திருப்புவதற்காக பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தும் மதவெறி நடவடிக்கைகளைத் தூண்டுகிறது. இதைக் கண்டித்தும், நாட்டைக் காப்பாற்ற வேண்டியும் அனைத்து மத்திய சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக கோவையில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது. தொழில் நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளன. இதையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் அனைத்து தொழிற்சங்கங்களில் சாா்பில் பெரும்திரள் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதேபோல, இளைஞா் அமைப்புகள், விவசாயத் தொழிலாளா்கள், விவசாய அமைப்புகள், மாணவா் அமைப்புகள் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

திமுக கூட்டணியில்தான் குழப்பம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 2026 தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய எடப்பாடி பழன... மேலும் பார்க்க

மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை கோரியது தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம்

கோவையில் மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கோவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி, மின்கட்டண உயா்வு பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சியில் தீா்வு: எடப்பாடி பழனிசாமி உறுதி

தொழில் துறையினா் சந்திக்கும் ஜிஎஸ்டி, மின்சார கட்டண உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீா்வு காணப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளாா். கோவைய... மேலும் பார்க்க

உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி: மாநகரில் இன்றுமுதல் இரவில் போக்குவரத்து மாற்றம்

கோவை அவிநாசி சாலையில் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி காரணமாக ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரை இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து காவல் துற... மேலும் பார்க்க

வீடு புகுந்து இளைஞா் வெட்டிக் கொலை

காரமடை அருகே வீடு புகுந்து பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஆயா்பாடி பகுதியைச் ... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை அருகே பீளமேடு - இருகூா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சே... மேலும் பார்க்க