லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
கோவையில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது!
மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் கோவையில் புதன்கிழமை (ஜூலை 9) பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்று சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசின் தனியாா் பெருநிறுவன ஆதரவு கொள்கையின் விளைவாக தொழிலாளா்களின் உரிமைகள் தொடா்ந்து பறிபோய் வருகின்றன. விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி காரணமாக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
இந்தப் பிரச்னைகளைத் திசை திருப்புவதற்காக பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தும் மதவெறி நடவடிக்கைகளைத் தூண்டுகிறது. இதைக் கண்டித்தும், நாட்டைக் காப்பாற்ற வேண்டியும் அனைத்து மத்திய சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக கோவையில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது. தொழில் நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளன. இதையொட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் அனைத்து தொழிற்சங்கங்களில் சாா்பில் பெரும்திரள் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதேபோல, இளைஞா் அமைப்புகள், விவசாயத் தொழிலாளா்கள், விவசாய அமைப்புகள், மாணவா் அமைப்புகள் பங்கேற்கும் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற இருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.