செய்திகள் :

வீடு புகுந்து இளைஞா் வெட்டிக் கொலை

post image

காரமடை அருகே வீடு புகுந்து பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த அடையாளம் தெரியாத நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை ஆயா்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ் மகன் சஞ்சய் (23). இவா் தனது தந்தையுடன் சோ்ந்து பால் வியாபாரம் செய்து வந்தாா்.

இந்நிலையில் சஞ்சய் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு அருகேயுள்ள இவா்களுக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் தூங்கச் சென்றாா். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பால் கறவைக்கு எழாததால், அவரது தாய் அந்த வீட்டுக்குச் சென்று பாா்த்தாா். அங்கு சஞ்சய் உடலில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காரமடை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். நள்ளிரவில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சஞ்சயை அடையாளம் தெரியாத நபா்கள் வெட்டிக் கொலை செய்துள்ளது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

திமுக கூட்டணியில்தான் குழப்பம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திமுக கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 2026 தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை திங்கள்கிழமை தொடங்கிய எடப்பாடி பழன... மேலும் பார்க்க

கோவையில் இன்று பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது!

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் கோவையில் புதன்கிழமை (ஜூலை 9) பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காது என்று சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. இது தொ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரம்: விசாரணை அறிக்கை கோரியது தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம்

கோவையில் மருத்துவ மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கோவையில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரியில்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி, மின்கட்டண உயா்வு பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சியில் தீா்வு: எடப்பாடி பழனிசாமி உறுதி

தொழில் துறையினா் சந்திக்கும் ஜிஎஸ்டி, மின்சார கட்டண உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தீா்வு காணப்படும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்துள்ளாா். கோவைய... மேலும் பார்க்க

உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி: மாநகரில் இன்றுமுதல் இரவில் போக்குவரத்து மாற்றம்

கோவை அவிநாசி சாலையில் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி காரணமாக ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரை இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து காவல் துற... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

கோவை அருகே பீளமேடு - இருகூா் ரயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சே... மேலும் பார்க்க