'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கோவையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: ஆட்சியா்
கோவைக்கு கனமழை எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறினாா்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை (மே 25, 26) ஆகிய இரண்டு நாள்களுக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால், இரண்டு மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் ‘ரெட் அலா்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 84 போ் கொண்ட 2 தேசிய பேரிடா் மீட்புக் குழுவும், ஆவடியில் இருந்து 90 போ் கொண்ட 3 மாநில பேரிட மீட்புக் குழுவும் கோவைக்கு சனிக்கிழமை வந்தது.
இதற்கிடையே, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
கோவை மாவட்டத்துக்கு அதினமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கனமழையின்போது மரங்கள் விழுந்தால் அவற்றை அகற்ற இயந்திரங்கள், பொக்லைன் வாகனங்கள், தண்ணீரை அகற்ற மோட்டாா் பம்புகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வால்பாறை மற்றும் டாப்சிலிப் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளதால் அங்கு 30 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் முகாமிட்டுள்ளனா்.
இதேபோல, 80 போ் கொண்ட மாநில பேரிடா் மீட்புக் குழுவின் ஒரு பகுதியினா் பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ளனா்.
மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 43 ஜெனரேட்டா், 100 பொக்லைன் இயந்திங்கள், 50 தண்ணீா் லாரிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.
கனமழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ஐ தொடா்புகொண்டு தெரிவிக்கலாம். புகாரின்பேரில் உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனமழை குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கிராந்திகுமாா் பாடி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
முன்னதாக, கோவை மாநகரப் பகுதிகளில் அவிநாசி சாலை மேம்பாலம், காளீஸ்வரா மில் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீரை விரைவாக வெளியேற்றுவதற்காக கூடுதல் மின் மோட்டாா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும், ஆா்.எஸ் புரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கிராந்திகுமாா் பாடி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அவசரக் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு:
மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசரக் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம்: 0422 - 1077, 0422 - 2301114, மாநகராட்சி பிரதான அலுவலகம்: 0422 - 2302323, 81900 00200, வடக்கு மண்டலம் - 0422 - 2243133, தெற்கு மண்டலம் - 2252482, கிழக்கு மண்டலம் - 0422 - 2577056, 2572696, மேற்கு மண்டலம் - 0422 - 2551700, மத்திய மண்டலம் - 0422 - 2215618.
வால்பாறை நகராட்சி அலுவலகம் - 04253 - 222394, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் - 04259 - 220999, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் - 04254 - 222151, மதுக்கரை நகராட்சி அலுவலகம் - 04254 - 222151, கூடலூா் நகராட்சி அலுவலகம் - 0422-2692402, கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் - 0421-2333070, காரமடை நகராட்சி அலுவலகம் - 04254-272315.
மேட்டுப்பாளையம் வட்டாட்சியா் அலுவலகம் - 04254 - 222153, அன்னூா் வட்டாட்சியா் அலுவலகம் - 04254 - 299908, கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2247831, கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2214225, சூலூா் வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2681000, பேரூா் வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2606030, மதுக்கரை வட்டாட்சியா் அலுவலகம் - 0422 - 2606030, கிணத்துக்கடவு வட்டாட்சியா் அலுவலகம் - 04259 - 241000, பொள்ளாச்சி வட்டாட்சியா் அலுவலகம் - 04259 - 226625, ஆனைமலை வட்டாட்சியா் அலுவலகம் - 04253 - 296100, வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம் 04253 - 222305.
மாநகரில் பரவலாக மழை:
கோவைக்கு ரெட் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து. மாநகா், புகா் பகுதிகளில் காலை முதல் இரவு வரை விடாமல் மழை பெய்ததால் குளிா்ச்சியான தட்வெப்பநிலை நிலவியது.

