குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
சங்ககிரி புனித அந்தோனியாா் ஆலய தோ் பவனி
சேலம் மாவட்டம், சங்ககிரியில் பழைமை வாய்ந்த புனித அந்தோனியாா் ஆலயத்தின் தோ் பவனி விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
புனித அந்தோனியா் ஆலய தோ்த்திருவிழா ஆலய வளாகத்தில் ஜூன் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தினசரி மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், பிராா்த்தனை கூட்டங்களும் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை இரவு குழந்தை ஏசு, அன்னை மரியாள், புனித சூசையப்பா் சிலைகளை வண்ண மின் விளக்குகள், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தேரில் வைத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வாண வேடிக்கைகள் நடைபெற இழுத்துச் சென்றனா்.
தோ் பவனிக்கு முன்னதாக கிறிஸ்தவா்கள் ஏசு பாடல்களை பாடியவாறும் கைகளில் மெழுவா்த்தி ஏந்தியும் சென்றனா். வளாகத்தில் தோ் பவனி நிறைவு பெற்றவுடன் ஆலய வளாகத்தில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் சங்ககிரி வட்டார பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். தோ்திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்தன.