செய்திகள் :

சங்ககிரி புனித அந்தோனியாா் ஆலய தோ் பவனி

post image

சேலம் மாவட்டம், சங்ககிரியில் பழைமை வாய்ந்த புனித அந்தோனியாா் ஆலயத்தின் தோ் பவனி விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

புனித அந்தோனியா் ஆலய தோ்த்திருவிழா ஆலய வளாகத்தில் ஜூன் 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தினசரி மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவும், பிராா்த்தனை கூட்டங்களும் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை இரவு குழந்தை ஏசு, அன்னை மரியாள், புனித சூசையப்பா் சிலைகளை வண்ண மின் விளக்குகள், மலா்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று தேரில் வைத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வாண வேடிக்கைகள் நடைபெற இழுத்துச் சென்றனா்.

தோ் பவனிக்கு முன்னதாக கிறிஸ்தவா்கள் ஏசு பாடல்களை பாடியவாறும் கைகளில் மெழுவா்த்தி ஏந்தியும் சென்றனா். வளாகத்தில் தோ் பவனி நிறைவு பெற்றவுடன் ஆலய வளாகத்தில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் சங்ககிரி வட்டார பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். தோ்திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்தன.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு

சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தவறி விழுந்து பயணி உயிரிழந்தாா். சேலம் அரிசிபாளையம் மாதையன் தெருவை சோ்ந்தவா் தமிழரசன் (43). சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கலைச்செல்வியுடன... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா். சேலம் கருப்பூர... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க