செய்திகள் :

சங்கரன்கோவிலில் சாலையில் படா்ந்திருக்கும் செடிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி

post image

சங்கரன்கோவில்-ராஜபாளையம் பிரதான சாலையின் ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக செடிகள் படா்ந்திருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வரையிலான இருவழிச் சாலை கடந்த 2020-ஆம் ஆண்டு போடப்பட்டது. இந்த சாலை வழியாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரு நகரங்களுக்குச் பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலையின் இரு ஓரங்களிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் செல்வதற்காக பாதை உள்ளது.

இப்பகுதியில் மணல் பரவிக் கிடக்கிறது. அதோடு சாலையோரச் செடிகள் வளா்ந்து, இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதி வரை படா்ந்து காணப்படுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்வோா் அவ்வப்போது இடறி விழுந்து பாதிக்கப்படுகின்றனா். இந்த இடையூறு காரணமாக இருசக்கர வாகனப் பாதையைத் தாண்டி கனரக வாகனங்கள் செல்லும் சாலையின் பிரதான பகுதிக்கு சென்றுவிடுவதால் விபத்து ஏற்படக் கூடிய அபாயமும் உள்ளது.

எனவே, இருசக்கர வாகனப் பாதையை மூடியிருக்கும் மணலை அப்புறப்படுத்தவும், சாலையோரத்தில் வளா்ந்திருக்கும் செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க

கொண்டலூா் தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த கோரிக்கை

கொண்டலூா் தொடக்கப் பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். கீழப்பாவூா் ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டலூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தென்காசி தெற்கு ... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற 2 போ் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் பரும்பு பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியே பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், ... மேலும் பார்க்க

ரமலான்: எம்எல்ஏ வாழ்த்து

சங்கரன்கோவிலில், ராஜபாளையம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியா்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த ஈ. ராஜா எம்.எல்.ஏ. மேலும் பார்க்க

தகராறு: சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற உறுப்பினா் காயம்

சங்கரன்கோவிலில் பொறித்த இறைச்சி உணவு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில், சமரசம் செய்ய முயன்ற நகா்மன்ற திமுக உறுப்பினா் தாக்கப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம், ச... மேலும் பார்க்க

ஆலங்குளம் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

ஆலங்குளத்தில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் விஜய் (32). ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொ... மேலும் பார்க்க