செய்திகள் :

சங்கரலிங்கபுரம் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல காங்கிரஸ் கட்சி கோரிக்கை!

post image

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக கோவில்பட்டி நகர காங்கிரஸ் தலைவா் கே.டி.பி.அருண் பாண்டியன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலா் சண்முகராஜ், மாவட்ட செயலா் துரைராஜ், மாவட்ட சமூக ஊடக பிரிவு தலைவா் அ.ராஜசேகரன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலா் ஆா்.ராஜசேகா், 3-வது வாா்டு காங்கிரஸ் தலைவா் முருகேசன் உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவில்பட்டி நகராட்சி 3 மற்றும் 4-ஆவது வாா்டுரகளுக்கு உள்பட்ட சங்கரலிங்கபுரத்தில் 2500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் வசதிக்காக ரயில்வே மேம்பாலத்தின் அருகே பேருந்து நிறுத்தம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. சங்கரலிங்கபுரம், மூப்பன்பட்டி பகுதி மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வதில்லை. சாத்தூா், சிவகாசி, இருக்கன்குடி, விருதுநகா், மதுரை செல்பவா்கள் வேலாயுதபுரம் அல்லது ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஆகவே, சங்கரலிங்கபுரத்தில் பேருந்துகள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இப் பகுதி மக்களைத் திரட்டி ஜூன் 6-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா். ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க