செய்திகள் :

சசிகலா, ஓபிஎஸ் விவகாரத்தில் ஏற்கெனவே சொல்லியதுதான்: எடப்பாடி பழனிசாமி

post image

சசிகலா, ஓபிஎஸ் விவகாரத்தில் ஏற்கெனவே சொல்லியதுதான் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சேலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு மக்கள் எம்ஜிஆர்- ஐ தெய்வமாக பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை விமர்சிப்பவர்கள், அரசியலில் காணாமல் போய்விடுவார்கள்.

அதிமுக-வை பொருத்தவரை பல கூட்டங்களில் தெரிவித்து இருக்கிறேன், ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது அதிமுக.

தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் அவர்கள் மறைவிற்குப் பிறகும் அதிமுக ஜாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது. அதிமுக-வில் எண்ணற்ற ஜாதியினர் இருக்கிறார்கள்.

அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம். இதனை சிலரால் பொறுக்க முடியவில்லை. இதனுடைய வெளிப்பாடுதான் இவ்வாறு பேசுகிறார்கள் என்றார்.

முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் முதல்வரை சந்தித்துள்ளனரே என்ற கேள்விக்கு, அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வந்து விட்டது, அவர்கள் கூட்டணி இன்னும் எட்டு மாதத்தில் நிலைக்குமா? நிலைக்காதா? என்று தெரியவரும். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருக்கிறது.

ஆப்கன் எல்லையில் பாக். ராணுவம் நடவடிக்கை! 2 நாள்களில் 47 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

அதற்குள் சிறப்பான கூட்டணி அமையும். பாமக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது என்ற கேள்விக்கு, அது அவர்களுடைய சொந்தக் கட்சி. அதில் கருத்து சொல்வது சரியில்லாதது, நான் எப்பொழுதும் அப்படிப்பட்ட கருத்தை சொல்ல மாட்டேன்.

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும் என்ற அவரிடம், கட்சியிலிருந்து பிரிந்துள்ள சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் சேர்க்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நான் பல ஆண்டுகளாக கூறி வருகிறேன் , அதே கருத்துதான் எதற்கும் பொருந்தும் என்று அவர்களை சேர்க்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami, the AIADMK General Secretary, has stated that what was said earlier regarding Sasikala and OPS is the same.

'தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்'

தமிழ்நாடு மீனவர்கள் சிறைவாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் இன்ற... மேலும் பார்க்க

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(9.8.2025) செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில... மேலும் பார்க்க

அகல் விளக்கு திட்டத்தை தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

புதுகோட்டையில் அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ‘‘9 ம... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் பாராட்டு

தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக மக்கள் நீதி மய்ய தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் ... மேலும் பார்க்க

எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை: தொல். திருமாவளவன்

எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமி... மேலும் பார்க்க

பாஜக மாநில செயலாளருக்கு எதிரான புகார்: சேலம் நீதிமன்றத்துக்கு உத்தரவு

சென்னை: பாஜக மாநில செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வன்கொடுமை புகார் தொடர்பாக, சேலம் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் பாஜக ஸ்ட... மேலும் பார்க்க