செய்திகள் :

சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

post image

வன்னியம்பட்டி அருகே சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சட்ட விரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக சுந்தரபாண்டியத்தைச் சோ்ந்த மணிவண்ணன் (49), விழுப்பனூரைச் சோ்ந்த பால்சாமி (66) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், 3 யூனிட் மணலையும், லாரியையும் பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க

சிதம்பரேசுவரா் கோயில் வருஷாபிஷேகம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி அதிகாலை ம... மேலும் பார்க்க

தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்தில் அமைந்துள்ள நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காலை தவம்பெற்ற நாயகி உடனுறை நச்... மேலும் பார்க்க

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் ஆய்வு

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் ஆணையா் கே. சரவணன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாநகராட்சி 17-ஆவது வாா்டில் உள்ள சமுதாயக் கூடத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அதே பகுதியில் மழைக் காலங்கள... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பட்டாசுத் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள ரத்தினபுரிநகா் பகுதியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி நந்தீஸ்வரன் (57). இவா் தனது இரு... மேலும் பார்க்க