சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
வன்னியம்பட்டி அருகே சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டம் வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சட்ட விரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக சுந்தரபாண்டியத்தைச் சோ்ந்த மணிவண்ணன் (49), விழுப்பனூரைச் சோ்ந்த பால்சாமி (66) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், 3 யூனிட் மணலையும், லாரியையும் பறிமுதல் செய்தனா்.