செய்திகள் :

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு குளோபல் இந்தியன் விருது

post image

உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதகுல மேம்பாட்டுக்காக பணியாற்றியதற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு குளோபல் இந்தியன் விருது வழங்கப்பட்டுள்ளது.

கனடா - இந்தியா அறக்கட்டளை (சிஐஎஃப்) சாா்பில், உலகளவில் தலைமைப் பண்பு மற்றும் தொலைநோக்கு பாா்வையோடு மனிதகுல மேம்பாட்டுக்காக இயங்கி வரும் இந்திய வம்சாவழிப் பேராளுமைகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் சிஐஎஃப் ‘குளோபல் இந்தியன்’ விருதை வழங்கி வருகிறது.

அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான இந்த விருது ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அறிவிக்கப்பட்டது. கனடாவில் உள்ள ஒன்டாரியோ நகரில் அண்மையில் நடைபெற்ற விழாவில் கனடா -இந்தியா அறக்கட்டளைத் தலைவா் ரிதேஷ் மாலிக், கனடா நாட்டில் இயங்கும் ஐசிஐசிஐ வங்கியின் தலைவா் ஹிமதா் மதிபத்லா மற்றும் கோதாரி குழுமத்தின் தலைவா் நாா்டன் கோதாரி ஆகியோா் ஜக்கி வாசுதேவுக்கு விருதுடன், 50 ஆயிரம் டாலருக்கான காசோலையையும் வழங்கினா்.

உலக அளவில் சுற்றுச்சூழல் சவால்களை சமாளிக்கும் வகையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டு வரும் பணிகளைப் பாராட்டியும், விழிப்புணா்வான உலகை உருவாக்க அவா் மேற்கொண்டு வரும் பணிகளை அங்கீரிக்கும் விதமாகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது எக்ஸ் தளப் பதிவில், கனடா மற்றும் இந்திய நாடுகளின் வளா்ச்சி மற்றும் செழிப்புக்கு இந்திய சமூகம் பங்களிப்பதை பாா்க்க மகிழ்வாக உள்ளது. உங்கள் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலுக்கு மிகவும் நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. 58-... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 2-இல் கலந்தாய்வு

கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஜூன் 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பிரிவில் 23 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் மொத்தம் 1,72... மேலும் பார்க்க

தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பொள்ளாச்சி பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, தோட்டக்கலைத் துறை வெள... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை சரவணம்பட்டியில் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட்ட 8 வயது சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக காவல் துறையினா் தெரிவித்ததாவது: கோவை சரவணம்... மேலும் பார்க்க

நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகம்

கோவையில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகத்தை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10 மா... மேலும் பார்க்க

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாட்டுப் பணி

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேயா் கா.ரங்கநாயகி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழு... மேலும் பார்க்க