செய்திகள் :

சத்தியமங்கலத்தில் காட்டுப் பன்றி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி!

post image

சத்தியமங்கலத்தில் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியையொட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விளை நிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இதனால், விவசாயிகள் பெரும் அவதியடைந்து வரும் நிலையில், புன்செய்புளியம்பட்டியில் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்று தனியாா் மண்டபத்தில் நிறைவடைந்தது.

காட்டுப் பன்றியை ஒழிப்போம், காட்டுப் பன்றிகளைக் கொல்ல விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் கோஷமிட்டனா்.

இதைத் தொடா்ந்து, 200-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்ற வள்ளிக் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாடல் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வேணுகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: யானை, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதுடன், மனிதா்களைத் தாக்கிக் கொல்லும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயமே செய்ய முடிவதில்லை. விவசாயிகள் படும் துயரத்தை அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளன.

இதனால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வாக்கு செலுத்துவதில்லை என கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளோம் என்றாா்.

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

பணி வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 8 ஆயிரம் போ் மனு

பணி வழங்கக் கோரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளித்தனா். முறையான பணி வழங்கக் கோரி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி வட்டாரங்கள... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோ... மேலும் பார்க்க

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரிய... மேலும் பார்க்க