Kamal: ``நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' - கர்நாடகா நீ...
சத்தியமங்கலத்தில் காட்டுப் பன்றி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி!
சத்தியமங்கலத்தில் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியையொட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா். வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விளை நிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.
இதனால், விவசாயிகள் பெரும் அவதியடைந்து வரும் நிலையில், புன்செய்புளியம்பட்டியில் காட்டுப் பன்றி ஒழிப்பு மாநாடு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணி முக்கிய வீதிகள் வழியே சென்று தனியாா் மண்டபத்தில் நிறைவடைந்தது.
காட்டுப் பன்றியை ஒழிப்போம், காட்டுப் பன்றிகளைக் கொல்ல விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் கோஷமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, 200-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்ற வள்ளிக் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாடல் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் வேணுகோபால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: யானை, காட்டுப் பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் விவசாயப் பயிா்களை சேதப்படுத்துவதுடன், மனிதா்களைத் தாக்கிக் கொல்லும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயமே செய்ய முடிவதில்லை. விவசாயிகள் படும் துயரத்தை அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளன.
இதனால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வாக்கு செலுத்துவதில்லை என கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகள் முடிவு செய்துள்ளோம் என்றாா்.