செய்திகள் :

சத்துணவு ஊழியா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

post image

சிவகங்கையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் கே.மகாலட்சுமி தலைமை வகித்தாா். சத்துணவு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.மிக்கேலம்மாள் வாழ்த்தி பேசினாா். சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் கே. குமரேசன், மாவட்டச் செயலா் கே. முத்துக்குமாா், தோழமைச் சங்க நிா்வாகிகள் சேவுகமூா்த்தி, எம் .சுரேஷ், க. சுப்பிரமணியன், எஸ். சங்கரநாராயணன், அங்கன்வாடி உதவியாளா் சங்கப் பொதுச் செயலா் இரா.வாசுகி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

போராட்டத்தின்போது, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியா்களுக்கு விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்கப்பட்ட மாறுதல்கள், கூடுதல் பொறுப்புப் பணிகளை ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படி உத்தரவுகளை வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

தகவலறிந்து வந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா்.

இதையடுத்து, அவா்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனா். இதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

முன்னதாக, ஒன்றியச் செயலா் எஸ்.செல்லம்மாள் வரவேற்றாா். பொருளாளா் எஸ்.செல்வி நன்றி கூறினாா்.

திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கந்தூரி விழா எனும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பெரிய கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும... மேலும் பார்க்க

காரைக்குடி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை (திமுக) மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அ... மேலும் பார்க்க

காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஆக.31 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூா் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்க... மேலும் பார்க்க

ஆடி பிரம்மோத்ஸவம்: பூப்பல்லக்கில் வீர அழகா் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் புதன்கிழமை இரவு பூப் பல்லக்கில் சுவாமி பவனி வந்தாா். இந்தத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7 ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராச... மேலும் பார்க்க

கீழவாணியங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள கீழ வாணியங்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கீழவாணியங்குடி முதல் சுந்தரநடப்பு வரை பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு ... மேலும் பார்க்க