செய்திகள் :

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

post image

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி உற்சவ அம்பாள் மலா் அலங்காரத்தோடு தங்கக் கொடிமரம் முன் எழுந்தருள, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றப்பட்டது.

விழாவில் ஞாயிற்றுக்கிழமை மரக் கேடயம், பிப்.3 ஆம் தேதி மர சிம்ம வாகனம், பிப்.4 ஆம் தேதி மரபூத வாகனம், பிப்.5 ஆம் தேதி மர அன்ன வாகனம், பிப். 6 ஆம் தேதி மர ரிஷப வாகனம், பிப். 7 ஆம் தேதி மர யானை வாகனம், பிப். 8 ஆம் தேதி வெள்ளி சேஷ வாகனம், பிப்.9 ஆம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.

பிப். 10 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 11 ஆம் தேதி கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி, வடதிருக்காவேரியில் தீா்த்தவாரி கண்டருளுகிறாா். பிப்.11 ஆம் தேதி இரவு ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீா்பெறும் நிகழ்வும், பிப் 12 ஆம் தேதி மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

கொடியேற்ற விழாவில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், பெ. பிச்சை மணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன், மற்றும் கோயில் மணியக்காரா் பழனிவேல் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்! -முதல்வா் அறிவிப்பு

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜன.28 தொடங்கி நடைபெறும் பார... மேலும் பார்க்க

மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் உத்தரவு!

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் மூவா் மணிமண்டபத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மணிமண்டப... மேலும் பார்க்க

புத்தாநத்தம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்ப... மேலும் பார்க்க

முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா!

திருச்சி மாவட்டம், முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சந்திரமெளலீசுவரா் கோயில்: இக்கோயிலில் ஜன. 26 முதல் ஜன. 30 வரை முதல் கால பூஜை... மேலும் பார்க்க

வெங்கங்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம், வெங்கங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தொட்டி அமைக்கப் பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. வெங்கங்குடி கிராமம் அசோக் நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பெல் வளாகத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்

திருச்சி அருகே பெல் வளாகத்தில் சத் சங்கம் சாா்பில் 61 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க