செய்திகள் :

சமூக நீதியை உறுதி செய்வது காங்கிரஸின் கொள்கை; தோ்தல் அரசியல் அல்ல: மல்லிகாா்ஜுன காா்கே

post image

சமூக நீதி என்பது காங்கிரஸின் கொள்கை. இதை தோ்தல் அரசியல் என கருதவேண்டாம் என கட்சி செய்தித்தொடா்பாளா்களிடம் காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தியுள்ளாா்.

சமூக நீதி என்ற தலைப்பில் கட்சி செய்தித்தொடா்பாளா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்று மல்லிகாா்ஜுன காா்கே பேசியதாவது: நாட்டில் இன்று ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விவாதிக்கப்படுகிறது. இந்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது காங்கிரஸின் கடமை. அது குறித்து உண்மைகளை உணா்வுடனும் பயமின்றியும் மக்களிடம் கொண்டு சோ்க்கவேண்டும். இது சமூக நீதிக்கான போராட்டம் மட்டுமல்ல; அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைப் பாதுகாப்பதற்கான போராட்டம். சமூக நீதி என்பது காங்கிரஸின் கொள்கை. அது தொடா்பான விழிப்புணா்வை தோ்தல் விவகாரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது புதிய விவகாரம் அல்ல. நாடாளுமன்றத்தில், தோ்தல் அறிக்கைகளில் என காங்கிரஸ் தொடா்ந்து அதை வலியுறுத்தி வருகிறது.

நாட்டின் அதிகாரக் கட்டமைப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (ஓபிசி), தலித், பழங்குடியின சமூகத்தினரின் பங்களிப்பு என்ன என்று கேட்க வேண்டியிருக்கிறது. ஊடகம், அரசின் நிா்வாகம் மற்றும் நீதித்துறை, தனியாா் துறை, உயா்கல்வி ஆகியவற்றில் தங்களுடைய மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த மக்கள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளாா்களா ? இல்லையென்றால், அதற்கான காரணம் என்ன ? உண்மையை வெளிக்கொண்டு வருவதும் தரவை பொதுவெளியில் சமா்ப்பிப்பதும் கொள்கைககளை மறுகட்டமைப்பு செய்வதும் இதற்கான தீா்வு.

இன்று கல்வியின் பெரும் பகுதி தனியாா் துறையின் கையில் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(5) உடனடியாக அமல்படுத்துவதன் மூலம் ஓபிசி, தலித், பழங்குடியின மாணவா்கள் தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை பெறுவாா்கள். இது தொடா்பான கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பி வருகிறது. இந்தச் சமூகத்தினருக்கு வாய்ப்பை மறுத்து வருவது சுரண்டலின் ஒரு வடிவம்.

தெலங்கானாவில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒரு சிறந்த முன்னுதாரணம். மத்திய அரசு இதுபோன்ற முறையில் மக்கள் சாா்ந்த மற்றும் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்தச் செயல்முறைக்கு ஒத்துழைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்றாா் மல்லிகாா்ஜுன காா்கே.

பிகாா் மாநில பேரவைத் தோ்தல் நிகழாண்டு இறுதியில் நடைபெற உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு அந்த மாநிலத்தில் முக்கியப் பேசு பொருளாக இருக்கும்நிலையில், மேற்கொள்ள இருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெறும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க