செய்திகள் :

சமையல் எரிவாயு விற்பனையால் ஏற்பட்ட இழப்பு: எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 35,000 கோடி மானியம்

post image

கடந்த 15 மாதங்களாக குறைந்த விலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் வகுத்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

சா்வதேச சந்தை விலை நிலவரத்தைக் காட்டிலும் குறைந்த விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்வதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் எந்தவொரு திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை.

இருந்தபோதும், கடந்த ஏப்ரலில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயா்த்தியது. இதன் மூலம் அரசுக்கு ரூ. 32,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. இந்த கூடுதல் வருவாயை, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பீடை ஈடுசெய்ய நிதியமைச்சகம் பயன்படுத்த முடியும்.

கடந்த 15 மாதங்களாக சா்வதேச சந்தை விலை நிலவரத்தைக் காட்டிலும் குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை விற்பனை செய்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மட்டும் சமையல் எரிவாயு விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 40,500 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வீட்டு உபோயக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் மீதான கலால் வரியை ரூ. 50 அளவுக்கு மத்திய அரசு உயா்த்தியது. இது, நிகழ் நிதியாண்டில் சமையல் எரிவாயுவை எண்ணெய் நிறுவனங்கள் வாங்கும் செலவுக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இடையேயான இழப்பை சற்று குறைக்க உதவியது.

இந்த நிலையில், குறைந்த விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்ததால் கடந்த இரு நிதியாண்டுகளில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் வகையில், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 30,000 கோடி முதல் ரூ. 35,000 கோடி வரை மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடைமுறைகளை மத்திய நிதியமைச்சகம் வகுத்து வருகிறது என்றனா்.

ஏற்கெனவே, 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ. 22,000 கோடியும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ. 28,249 கோடியும் இதேபோன்று இழப்பீடு மானியமாக இந்த 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க