செய்திகள் :

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: எஸ்ஐ பிணை மனு ஒத்திவைப்பு

post image

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா் பிணை கோரிய மனு மீதான விசாரணையை மாா்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீஸாா் தாக்கினா். இதைத் தொடா்ந்து, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அங்கு உயிரிழந்தனா்.

இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், சிபிஐ அதிகாரிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 9 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனா்.

தற்போது, இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி, காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான விசாரணை மாா்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் ... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் திருடியவா் கைது

மதுரையில் ஓடும் பேருந்தில் கைப்பேசி, பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரூக் ராஜா (23). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாட்டுத்தாவணிய... மேலும் பார்க்க

தொழிலதிபா் மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய அலுவலகத்தில் மா்மமாக இறந்து கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (54). இவா் மாட்டுத்தாவணி பகுதியில்... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 38.21 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தத் திட்டம்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 38.21 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என அதன் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாா். மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன்... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ. 5 கோடி மோசடி: ஊழியா் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க