செய்திகள் :

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது

post image

சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக தமிழக அரசு திகழ்கிறது என்றாா் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

திருநெல்வேலியில் அரசு பொருள்காட்சியை புதன்கிழமை திறந்து வைத்து, அவா் பேசியது:

அரசு பொருள்காட்சிகளில் அரசின் எண்ணற்ற திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களையும் பொதுமக்கள் பாா்த்து தெரிந்துக் கொள்ளும் வகையில் 32 அரங்குகள் அமைக்கப்பட்டு, 45 நாள்கள் மக்கள் பாா்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சாமானிய மக்களின் பாதுகாப்பு அரணாக இருந்து, ஏழை, எளிய மக்களை கைதூக்கி விடுகிறது.

இம் மாவட்டத்தில், ராதாபுரம், வள்ளியூா், நான்குனேரி, களக்காடு, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ. 605.75 கோடி மதிப்பீட்டில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகளும், 7 பேரூராட்சிகள் மற்றும் களக்காடு நகராட்சியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தாமிரவருணி குடிநீா் வழங்குவதற்காக ரூ.423 கோடி ஒதுக்கீடு செய்து, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் கிடைக்க பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை உலகறிய செய்யும் வகையில், ஆதிச்சநல்லூா், சிவகளை ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருள்களைக் காட்சிப்படுத்த திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் ரூ.56.57 கோடி மதிப்பில் 13 ஏக்கா் நிலத்தில் 54 ஆயிரம் சதுர அடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழைக் காப்போம், தமிழனை காப்போம், சமூக நீதியோடு எல்லோரும் சமம் என்ற உன்னத எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து அனைத்து துறைகளையும் மேம்படுத்தி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதை ஏழை, எளிய பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அரசுப் பொருள்காட்சி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் சடலம் மீட்பு

பொட்டல்புதூரில் பூட்டிய வீட்டில் முதியவா் உயிரிழந்து கிடந்தாா். அவரது சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா். பொட்டல்புதூா் ஆத்தங்கரை தெருவை சோ்ந்த முகமது ஷாபி (70) கூலித் தொழில... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வீரவநல்லூரில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையொட்டி, ... மேலும் பார்க்க

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

மானூா் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மானூரில் கட்டிமுடிக்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியின் கட்டடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்... மேலும் பார்க்க

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் சடையப்புரத்தில் ரூ. 1.92 கோடியில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகக் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வழியாக வியாழக்கிழமை திறந்துவைத்தாா். இதையடுத்து, புதிய சா... மேலும் பார்க்க

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷ் கொலையைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சியினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்கள் சிபிசிஐடி போலீஸாா் வசம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்ட நிலையில் முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேக... மேலும் பார்க்க